ஆக்2யாஹி மே கோ1 ப4வானுக்3ரரூபோ1
நமோஸ்து1 தே1 தே3வவர ப்1ரஸீத3 |
விஞ்ஞாது1மிச்1சா2மி ப4வன்த1மாத்3யம்
ந ஹி ப்1ரஜானாமி த1வ ப்1ரவ்ருத்1தி1ம் ||31||
ஆக்யாஹி--—சொல்லுங்கள்;மே---எனக்கு;கஹ--—யார்; பவான்—--நீங்கள்; உக்ர-ரூபஹ--—உக்கிரமான வடிவுடைய; நமஹ அஸ்து---—நான் வணங்குகிறேன்; தே--—உங்களுக்கு; தேவ-வர—--கடவுள்களின் கடவுளே; ப்ரஸீத—--கருணை காட்டுங்கள்; விஞ்ஞாதும்—--அறிய; இச்சாமி--—நான் விரும்புகிறேன்; பவந்தம்--—உங்களை; ஆத்யம்--—தொடக்கக்காலத்திற்கு உரிய; ந-—இல்லை; ஹி—-ஏனெனில்; ப்ரஜாநாமி--—புரிந்துகொள்ள; தவ—--உங்கள்; ப்ரவ்ருத்திம்—--செயல்பாடுகளை
BG 11.31: மிகவும் உக்கிரமான வடிவான நீங்கள் யார் என்று சொல்லுங்கள். கடவுள்களின் கடவுளே, நான் உமக்கு முன்பாக வணங்குகிறேன்; தயவு செய்து உமது கருணையை எனக்கு வழங்குங்கள். படைப்பிற்கு முன் இருந்த நீங்கள், உங்கள் இயல்பு மற்றும் செயல்பாடுகளை நான் புரிந்து கொள்ளாததால், நீங்கள் யார் என்பதை அறிய விரும்புகிறேன்.
முன்னதாக, அர்ஜுனன் ப்ரபஞ்ச வடிவத்தைப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஸ்ரீ கிருஷ்ணர் அதைக் காட்சிப்படுத்தியபொழுது, அர்ஜுனன் திகைத்து, கலக்கமடைந்தார். ஏறக்குறைய நம்பமுடியாத ப்ரபஞ்சக் காட்சியைக் கண்ட அவர், இப்பொழுது கடவுளின் இயல்பு மற்றும் நோக்கத்தை அறிய விரும்புகிறார். எனவே, ‘நீங்கள் யார், உங்கள் நோக்கம் என்ன?’ என்ற கேள்வியை அவர் கேட்கிறார்.
ஆக்2யாஹி மே கோ1 ப4வானுக்3ரரூபோ1
நமோஸ்து1 தே1 தே3வவர ப்1ரஸீத3 |
விஞ்ஞாது1மிச்1சா2மி ப4வன்த1மாத்3யம்
ந ஹி ப்1ரஜானாமி த1வ ப்1ரவ்ருத்1தி1ம் ||31||
மிகவும் உக்கிரமான வடிவான நீங்கள் யார் என்று சொல்லுங்கள். கடவுள்களின் கடவுளே, நான் உமக்கு முன்பாக வணங்குகிறேன்; தயவு செய்து உமது கருணையை எனக்கு வழங்குங்கள். படைப்பிற்கு …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily