ஆஶாபா1ஶஶதை1ர்ப3த்தா4: கா1மக்1ரோத4ப1ராயணா : |
ஈஹன்தே1 கா1மபோ4கா3ர்த2மன்யாயேனார்த2ஸஞ்ஜயான் ||12||
ஆஶா-பாஶா--—ஆசைகளின் பந்தம்; ஶதைஹி--—நூற்றுக்கணக்கான; பத்தாஹா--—கட்டுப்பட்டு; காம--—காமம்; க்ரோத--—கோபம்; பராயணாஹா---—அடிமைப்பட்டு; ஈஹந்தே---பாடுபடுகிறார்கள் காம--—காமம்; போக--—புலன்களின் திருப்தி; அர்த்தம்---—அதற்காக; அன்யாயேன---—நியாயமற்ற வழிமுறைகளால்; அர்த்த---—செல்வம்; ஸஞ்ஜயன்---சேகரிக்க.
BG 16.12: நூற்றுக்கணக்கான ஆசைகளால் அடிமைப்பட்டு, காமம் மற்றும் கோபத்தால் உந்தப்பட்டு, அவர்கள் தங்கள் புலன்களின் திருப்திக்காக அநியாயமான வழிகளில் செல்வத்தைக் குவிக்கப் பாடுபடுகிறார்கள்.
பணம்தான் உலகத்தை அனுபவிக்கும் வழி. அதனால்தான், தீராத ஆசைகளால் உந்தப்பட்ட பொருள் முதல்வாதிகள், அதைத் தங்கள் வாழ்வில் குவிப்பதற்கு இத்தகைய முன்னுரிமை கொடுக்கிறார்கள். செல்வம் சம்பாதிப்பதற்காக அவர்கள் சட்டவிரோதமான வழிகளைக் கடைப்பிடிக்கவும் தயங்குவதில்லை. எனவே, அவர்களின் ஒழுக்கக்கேடான நடத்தைக்காக அவர்களுக்கு இரட்டை தண்டனை காத்திருக்கிறது. பாகவதம் கூறுகிறது:
யாவத்3 ப்4ரியேத1 ஜட2ரம் தா1வத்1 ஸ்வத்1வம் ஹி தே3ஹினாம்
அதி4க1ம் யோ ’பி4மன்யேத1 ஸ ஸ்தே1னோ த3ந்1ட3ம் அர்ஹதி1 (7.14.8)
'ஒருவர் தனது பராமரிப்பிற்குத் தேவையான அளவு செல்வத்தை மட்டுமே வைத்திருக்க உரிமை உண்டு (மீதமுள்ளவை தர்மத்தில் கொடுக்கப்பட வேண்டும்). ஒருவன் தேவைக்கு அதிகமாகச் சேர்த்தால், கடவுளின் பார்வையில் அவன் ஒரு திருடன், அதற்காகத் தண்டிக்கப்படுவான்.’ எவ்விதமான தண்டனை? முதலாவதாக, மரணத்தின் போது, ஒருவர் சம்பாதித்து அவருடன் செல்லாது---அது பறிக்கப்படும். இரண்டாவதாக, கர்மாவின் சட்டத்தின்படி, அந்தச் செல்வத்தை ஈட்டுவதில் செய்த பாவங்களுக்கு ஒருவர் தண்டிக்கப்படுவார். கடத்தல்காரன் பிடிபட்டால், அவனது பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், சட்டத்தை மீறியதற்காகவும் தண்டிக்கப்படுவது போல அவன் தண்டிக்கப்படுகிறான்.
ஆஶாபா1ஶஶதை1ர்ப3த்தா4: கா1மக்1ரோத4ப1ராயணா : |
ஈஹன்தே1 கா1மபோ4கா3ர்த2மன்யாயேனார்த2ஸஞ்ஜயான் ||12||
நூற்றுக்கணக்கான ஆசைகளால் அடிமைப்பட்டு, காமம் மற்றும் கோபத்தால் உந்தப்பட்டு, அவர்கள் தங்கள் புலன்களின் திருப்திக்காக அநியாயமான வழிகளில் செல்வத்தைக் குவிக்கப் பாடுபடுகிறார்கள்.
Sign in to save your favorite verses.
Sign Inపవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily