ஸ்வபா4வஜேன கௌ1ன்தே1ய நிப3த்3த4: ஸ்வேன க1ர்மணா |
க1ர்து1ம் நேச்1ச1ஸி யன்மோஹாத்1க1ரிஷ்யஸ்யவஶோபி1 த1த்1 ||60||
ஸ்வபாவ-ஜேன—--ஒருவரின் ஜட இயல்பால் பிறந்த; கௌந்தேய--—குந்தியின் மகன் அர்ஜுனன்; நிபத்தஹ---கட்டுப்பட்ட; ஸ்வேன—--உன் சொந்த; கர்மணா--—செயல்களால்; கர்தும்--—செய்ய; ந--—இல்லை; இச்சஸி—--நீ விரும்பும்; யத்—--எதை; மோஹாத்—--மாயையால்; கரிஷ்யஸி--—நீ செய்வாய்.; அவஷஹ---போரிடத் தூண்டப்பட்டு: அபி--—இருந்தாலும்; தத்---அதை
BG 18.60: ஓ அர்ஜுனா மாயையால், நீ செய்ய விரும்பாத செயலை, உன் இயற்கை சக்தியால் உருவாகும் போக்கின் காரணமாகச் செய்வாய்.
தனது எச்சரிக்கை வார்த்தைகளைத் தொடர்ந்து, ஸ்ரீ கிருஷ்ணர் முந்தைய கருப்பொருளை மேலும் விரிவாகக் கூறுகிறார். அவர் கூறுகிறார், 'உன் கடந்தகால ஸ்ம்ஸ்காரங்களின் காரணமாக, நீ ஒரு க்ஷத்திரிய இயல்புடையவன். வீரம், வீரப்பெருந்தன்மை, தேசபக்தி ஆகிய உன் உள்ளார்ந்த குணங்கள் உன்னை போராடத் தூண்டும். நீ கடந்த வாழ்நாளில் பயிற்சி பெற்றுள்ளாய், இதில் ஒரு போர்வீரராக உன் கடமையை மதிக்க வேண்டும். உன் கண் முன்னே மற்றவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைக் கண்டு நீ செயலற்று இருக்க முடியுமா? உன் இயல்பும் விருப்பங்களும் தீமையை எங்கு பார்த்தாலும் அதை கடுமையாக எதிர்க்கும். எனவே, உன் இயல்பினால் நிர்ப்பந்திக்கப்படுவதை விட, எனது அறிவுறுத்தல்களின்படி நீ போராடுவது நன்மை பயக்கும்..’
ஸ்வபா4வஜேன கௌ1ன்தே1ய நிப3த்3த4: ஸ்வேன க1ர்மணா |
க1ர்து1ம் நேச்1ச1ஸி யன்மோஹாத்1க1ரிஷ்யஸ்யவஶோபி1 த1த்1 ||60||
ஓ அர்ஜுனா மாயையால், நீ செய்ய விரும்பாத செயலை, உன் இயற்கை சக்தியால் உருவாகும் போக்கின் காரணமாகச் செய்வாய்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily