த1ஸ்மாத்3யஸ்ய மஹாபா3ஹோ நிக்3ருஹீதா1னி ஸர்வஶ: |
இந்த்3ரியாணீன்த்3ரியார்தே2ப்4யஸ்த1ஸ்ய ப்1ரஞ்ஞா ப்1ரதி1ஷ்டி2தா1 ||68||
தஸ்மாத்—-எனவே; யஸ்ய—- எவருடைய; மஹா-பாஹோ—-- வலிமைமிக்க கைகளைக் கொண்ட அர்ஜுனனே; நிக்ருஹீதானி---கட்டுப்படுத்தப்பட்ட;ஸர்வஶஹ—--அனைத்து;இந்த்ரியாணி—-- புலன்களும்; இந்த்ரிய--- அர்தேப்யஹ—---புல பொருட்களிலிருந்து; தஸ்ய--—அவருடைய; ப்ரஞ்ஞா--—ஆழ்நிலை அறிவு; ப்ரதிஷ்டிதா--— நிலையுற்றது
BG 2.68: எனவே, புலன்களை அவற்றின் பொருட்களிலிருந்து கட்டுப்படுத்தியவன், ஓ வலிமைமிக்க கைகளைக் கொண்ட அர்ஜுனனே, ஆழ்நிலை அறிவில் உறுதியாக நிலைபெற்றுள்ளான்.
ஞானம் பெற்ற ஆத்மாக்கள் ஆழ்நிலை அறிவின் மூலம் புத்தியைக் கட்டுப்படுத்துகிறார்கள். பின்னர், தூய்மைப்படுத்தப்பட்ட புத்தியைக் கொண்டு, மனதைக் கட்டுப்படுத்துகிறார்கள், மேலும் புலன்களைக் கட்டுப்படுத்த மனம் பயன்படுத்தப்படுகிறது. மாறாக பொருள் நிபந்தனைக்குட்பட்ட நிலையில் புலன்கள் தங்கள் திசையில் மனதை இழுக்கின்றன; மனம் புத்தியை வென்று புத்தியை நல்வழியில் இருந்து தடம் புரள செய்கிறது. எனவே, ஆன்மிக அறிவால் புத்தியை தூய்மைப்படுத்தினால், புலன்கள் அடக்கப்படும் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். மற்றும், புலன்கள் கட்டுக்குள் வைக்கப்படும்போது, புத்தி தெய்வீக ஞானத்தின் பாதையில் இருந்து விலகாது.
த1ஸ்மாத்3யஸ்ய மஹாபா3ஹோ நிக்3ருஹீதா1னி ஸர்வஶ: |
இந்த்3ரியாணீன்த்3ரியார்தே2ப்4யஸ்த1ஸ்ய ப்1ரஞ்ஞா ப்1ரதி1ஷ்டி2தா1 ||68||
எனவே, புலன்களை அவற்றின் பொருட்களிலிருந்து கட்டுப்படுத்தியவன், ஓ வலிமைமிக்க கைகளைக் கொண்ட அர்ஜுனனே, ஆழ்நிலை அறிவில் உறுதியாக நிலைபெற்றுள்ளான்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily