ஏஷா ப்3ராஹ்மீ ஸ்தி2தி1: பா1ர்த2 நைனாம் ப்1ராப்1ய விமுஹ்யதி1 |
ஸ்தி2த்1வாஸ்யாமன்த1கா1லேபி1 ப்3ரஹ்மனிர்வாணம்ருச்1ச2தி1 ||72||
ஏஷா---அத்தகைய; ப்ராஹ்மீ ஸ்திதிஹி---கடவுளை உணரும் நிலை; பார்த---அர்ஜுனன்---ப்ரிதாவின் மகன்; ந-—ஒருபோதும் இல்லை ஏனாம்---இதை; ப்ராப்ய---அடைந்துவிட்டவர்; விமுஹ்யதி— மாயையில் சூழப்படுவது (ந விமுஹ்யதி---மாயையால் சூழ படமாட்டார்); ஸ்தித்வா----நிலைக்கப்பட்டவர்; அஸ்யாம்---இதில்; அந்தகாலே-----மரண நேரத்தில்; அபி---கூட; ப்ரஹ்ம-நிர்வாணம்--- மாயையில் இருந்து விடுதலை; ரிச்சதி---அடைவார் (ந விமுஹ்யதி---மாயையால் சூழ படமாட்டார்);;
BG 2.72: ஓ பார்த்தா, ஒரு ஞானம் பெற்ற ஆத்மாவின் நிலையை அடைந்து பிறகு, ஒருவன் மீண்டும் ஒருபோதும் ஏமாற்றப்படுவதில்லை. மரண நேரத்திலும் இந்த உணர்வில் நிலைநிறுத்தப்பட்டு, ஒருவர் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட்டு, கடவுளின் உன்னதமான இருப்பிடத்தை அடைகிறார்.
ப்ரஹ்மன் என்றால் ‘கடவுள்’ என்றும், ப்ராஹ்மி ஸ்திதி என்றால் ‘கடவுளை உணரும் நிலை’ என்றும் பொருள். ஆன்மா இதயத்தை சுத்தப்படுத்தும் போது (மனமும் புத்தியும் சில நேரங்களில் கூட்டாக இதயம் என்று குறிப்பிடப்படுகிறது), பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் 2.64 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, அவரது தெய்வீக அருளை வழங்குகிறார். அவரது அருளால், அவர் ஆத்மாவுக்கு தெய்வீக அறிவையும், தெய்வீக பேரின்பத்தையும், தெய்வீக அன்பையும் வழங்குகிறார். இவை அனைத்தும் கடவுளை உணரும் நேரத்தில் ஆன்மாவிற்கு கடவுளால் வழங்கப்பட்ட தெய்வீக ஆற்றல்கள்.
அதே நேரத்தில், அவர் ஆத்மாவை மாயையின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கிறார். (எண்ணற்ற வாழ்நாட்களின் செயல்களின் கணக்கு (ஸஞ்சித் கர்மாக்கள்) அழிக்கப்படுகின்றன. பொருள் உலகில் முடிவிலா வாழ்நாளின் அறியாமை அவித்யா-, அகற்றப்படுகிறது. மூன்று -குணங்களின் செல்வாக்கு, ஜட இயற்கையின் மூன்று முறைகள் நிறுத்தப்படுகின்றன., பொருள் நிபந்தனைக்குட்பட்ட நிலையின் மூன்று குறைபாடுகள் (த்ரி-தோஷங்கள்) முடிவுக்கு வருகின்றன. ஜட புத்தியின் ஐந்து குறைபாடுகள் (பஞ்ச கிளேஷங்கள்) அழிக்கப்படுகின்றன. பொருள் ஆற்றலின் ஐந்து உறைகள் (பஞ்ச கோஷங்கள்) எரிக்கப்படுகின்றன. அதுமுதல், ஆன்மா மாயையின் அடிமைத்தனத்திலிருந்து முழுமையாக முடிவற்ற காலத்திற்கு விடுபடுகிறது.
இந்த கடவுள்-உணர்தல் நிலையை அடையும் போது, ஆன்மா விடுதலைப் பெற்றது (ஜீவன் முக்த்) ஆகிறது) என்று கூறப்படுகிறது, அல்லது உடலில் வசிக்கும் போது கூட விடுவிக்கப்படுகிறது. பின்னர், மரணத்தின் போது, விடுவிக்கப்பட்ட ஆன்மா இறுதியாக ஶரீர உடலை நிராகரிக்கிறது, மேலும் அது கடவுளின் உன்னதமான இருப்பிடத்தை அடைகிறது. ரிக்3 வேத3ம் கூறுகிறது:
த1த்3விஷ்ணோ: ப1ரமம் ப1த3ம் ஸதா ப1ஷ்யந்தி1 ஸூர்யஹ (1.22.20)
'ஆன்மா கடவுளை அடைந்தவுடன், அது எப்போதும் அவருடன் இணைந்திருக்கும். அதன் பிறகு, மாயாவின் அறியாமை அதை மீண்டும் ஒருபோதும் வெல்ல முடியாது.’ மாயாவிலிருந்து நித்திய விடுதலையின் அந்த நிலை நிர்வாணம்-மோட்சம், (மோக்ஷம்) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக, விடுதலை என்பது கடவுள் உணர்தலின் இயல்பான விளை வாகும்.
ஏஷா ப்3ராஹ்மீ ஸ்தி2தி1: பா1ர்த2 நைனாம் ப்1ராப்1ய விமுஹ்யதி1 |
ஸ்தி2த்1வாஸ்யாமன்த1கா1லேபி1 ப்3ரஹ்மனிர்வாணம்ருச்1ச2தி1 ||72||
ஓ பார்த்தா, ஒரு ஞானம் பெற்ற ஆத்மாவின் நிலையை அடைந்து பிறகு, ஒருவன் மீண்டும் ஒருபோதும் ஏமாற்றப்படுவதில்லை. மரண நேரத்திலும் இந்த உணர்வில் நிலைநிறுத்தப்பட்டு, ஒருவர் பிறப்பு …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily