நஹி ஞானேன ஸத்3ருஶம் ப1வித்1ரமிஹ வித்3யதே1 |
த1த்1ஸ்வயம் யோக3ஸந்ஸித்4த3ஹ கா1லேனாத்1மனி விந்த3தி1 ||38||
ந---இல்லை; ஹி—--நிச்சயமாக; ஹி—--நிச்சயமாக; ஞானேன--—தெய்வீக அறிவை; ஸத்ருஶம்—--போன்ற; பவித்ரம்—--தூய்மையான; இஹ--—இந்த உலகில் வித்யதே--—இருக்கிறது; தத்—--அது; ஸ்வயம்—--தன்னை; யோக—--யோக பயிற்சி; ஸந்சித்தஹ—--முழுமையை அடைந்தவர்; காலேன—--காலப்போக்கில்; ஆத்மனி--—இதயத்தில்; விந்ததி—--பெறுகிறார்
BG 4.38: இவ்வுலகில் தெய்வீக அறிவைப் போல் தூய்மைப்படுத்துவது வேறு எதுவும் இல்லை. நீண்டகால யோகப் பயிற்சியின் மூலம் மனத்தூய்மை அடைந்த ஒருவர், சரியான நேரத்தில் இதயத்தில் அத்தகைய அறிவைப் பெறுகிறார்.
அறிவு ஒரு நபரை தூய்மைப்படுத்தவும், உயர்த்தவும், விடுவிக்கவும் மற்றும் கடவுளுடன் இணைக்கவும் வல்லமை கொண்டது. எனவே இது மிகவும் உன்னதமானது மற்றும் தூய்மையானது. ஆனால் இரண்டு வகையான அறிவுக்கு இடையே ஒரு வேறுபாடு தேவை--- தத்துவார்த்த தகவல் மற்றும் நடைமுறை உணர்தல்.
வேதங்களைப் படிப்பதாலும், குருவிடம் கேட்பதாலும் பெறப்படும் அறிவு ஒன்று உண்டு. இந்த தத்துவார்த்த தகவல் போதுமானதாக இல்லை. இது சமையலறையில் நுழைந்து சமைக்காமல் ஒரு சமையல் புத்தகத்தை மனப்பாடம் செய்வது போல் ஆனது. சமையலை பற்றிய இத்தகைய தத்துவார்த்த அறிவு ஒருவரின் பசியைப் போக்க உதவாது. அதேபோல, ஆன்மா, கடவுள், மாயா, கர்மம், ஞானம் மற்றும் பக்தி ஆகிய தலைப்புகளில் ஒருவர் குருவிடமிருந்து கோட்பாட்டு அறிவைப் பெறலாம், ஆனால் அதுவே மனிதனைக் கடவுள்-உணர்வடையச் செய்யாது. கோட்பாட்டின்படி ஒருவர் ஆன்மீக பயிற்சி (ஸாதனா) செய்தால், அது மனதைத் தூய்மைப்படுத்துகிறது. பின்னர், உள்ளிருந்து, ஒருவன் சுயத்தின் தன்மையையும் கடவுளுடனான அதன் உறவையும் உணர்ந்து கொள்கிறான். பதஞ்சலி முனிவர் கூறுகிறார்:
ஶ்ருதா1னுமான-ப்1ரஜ்ஞாப்4யாம் அன்ய-விஷயா விஶேஷார்த2த்1வாத்3
(யோக3 த3ரிசனம் 1.49)
‘யோக பயிற்சியின் மூலம் உள்ளிருந்து உணர்ந்து அடையும் அறிவு, வேதங்களின் தத்துவார்த்த அறிவை விட மிக மேலானது.’ அப்படி உணரப்பட்ட அறிவை, ஸ்ரீ கிருஷ்ணர் தூய்மையான உன்னதமான விஷயமாகப் போற்றுகிறார்.’
நஹி ஞானேன ஸத்3ருஶம் ப1வித்1ரமிஹ வித்3யதே1 |
த1த்1ஸ்வயம் யோக3ஸந்ஸித்4த3ஹ கா1லேனாத்1மனி விந்த3தி1 ||38||
இவ்வுலகில் தெய்வீக அறிவைப் போல் தூய்மைப்படுத்துவது வேறு எதுவும் இல்லை. நீண்டகால யோகப் பயிற்சியின் மூலம் மனத்தூய்மை அடைந்த ஒருவர், சரியான நேரத்தில் இதயத்தில் அத்தகைய அறிவைப் …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily