இஹைவ தை1ர்ஜித1: ஸர்கோ3 யேஷாம் ஸாம்யே ஸ்தி2த1ம் மன: |
நிர்தோ3ஷம் ஹி ஸமம் ப்1ரஹ்ம த1ஸ்மாத்1 ப்1ரஹ்மணி தே1 ஸ்தி2தா1: ||19||
இஹ ஏவ--—இந்த வாழ்க்கையில்; தைஹி—--அவர்களால்; ஜிதஹ---—வெற்றி; ஸர்கஹ--—படைப்பு; யேஷாம்--—யாருடைய; ஸாம்யே—--சமநிலையில்; ஸ்திதம்—--அமைந்துள்ள; மனஹ—--மனம்; நிர்தோஷம்--—குறையற்ற; ஹி--—நிச்சயமாக; ஸமம்—--சமத்துவத்தில்; ப்ரஹ்ம—--கடவுள்; தஸ்மாத்—--எனவே; ப்ரஹ்மணி---—முழு உண்மையில்; தே--—அவர்கள்; ஸ்திதாஹா—--நிலை உற்று இருக்கிறார்கள்
BG 5.19: பார்வையில் சமத்துவத்தில் மனதை நிலைநிறுத்துபவர்கள் இந்த வாழ்க்கையில் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியை வெல்வார்கள். அவர்கள் கடவுளின் குறைபாடற்ற தன்மைகளைக் கொண்டுள்ளனர், எனவே முழுமையான சத்தியத்தில் அமரந்திருக்கிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் முந்தைய வசனத்தில் விளக்கியபடி, ‘எல்லா உயிர்களிடத்தும் சமமான பார்வை கொண்டவர்’ என்று பொருள்பட ஸாம்யே என்ற சொல்லை பயன்படுத்துகிறார். மேலும், பார்வையின் சமத்துவம் என்பது விருப்பு வெறுப்புகள், மகிழ்ச்சி மற்றும் துன்பம், புகழ் மற்றும் அவதூறுகளுக்கு அப்பால் உயர்வதையும் குறிக்கிறது. அவ்வாறு செய்ய முடிந்தவர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறப்பு என்ற ஸம்சாரத்தை கடக்கிறார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
நாம் நம்மை உடலாக நினைக்கும் வரை, இந்த பார்வையின் சமத்துவத்தை நாம் அடைய முடியாது, ஏனென்றால் உடல் இன்பங்கள் மற்றும் அசௌகரியங்களுக்கான தொடர்ச்சியான ஆசைகள் மற்றும் வெறுப்புகளை நாம் அனுபவிப்போம். துறவிகள் உடல் உணர்வுக்கு மேலாக உயர்ந்து, உலகப் பற்றுகளை விட்டுவிட்டு, கடவுளில் தங்கள் மனதை ஈடுபடுத்துகிறார்கள். ராமாயணம் கூறுகிறது:
ஸேவாஹின் லக2னு ஸீய ரகு4பீ3ரஹி, ஜிமி அபி 3பே3கீ பு1ருஷ ஶரீரஹி
‘அறியாமையால் சூழப்பட்ட ஒரு நபர் தனது உடலுக்கு சேவை செய்வது போல் லக்ஷ்மணன் ராமருக்கும் சீதாவுக்கும் சேவை செய்தார்.’
இந்த தெய்வீக உணர்வில் ஒருவரது மனம் நிலைபெறும்போது, உடல் இன்ப துன்பங்களின் மீதான பற்றுதல் கடந்து, ஒரு சமநிலை நிலையை அடைகிறது. சுயநல ஆசைகளின் தியாகத்தின் மூலம் வரும் இந்த சமன்பாடு நடத்தையில் ஒருவரை கடவுளாக ஆக்குகிறது. மஹாபாரதம் கூறுகிறது: யோ ந கா1மயதே1 கிந்சி1த்1 ப்3ரஹ்ம பூ4யாய க1ல்பதே1 'ஆசைகளை துறப்பவன் கடவுளைப் போல் ஆவான்.'
இஹைவ தை1ர்ஜித1: ஸர்கோ3 யேஷாம் ஸாம்யே ஸ்தி2த1ம் மன: |
நிர்தோ3ஷம் ஹி ஸமம் ப்1ரஹ்ம த1ஸ்மாத்1 ப்1ரஹ்மணி தே1 ஸ்தி2தா1: ||19||
பார்வையில் சமத்துவத்தில் மனதை நிலைநிறுத்துபவர்கள் இந்த வாழ்க்கையில் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியை வெல்வார்கள். அவர்கள் கடவுளின் குறைபாடற்ற தன்மைகளைக் கொண்டுள்ளனர், எனவே முழுமையான சத்தியத்தில் அமரந்திருக்கிறார்கள்.
Sign in to save your favorite verses.
Sign Inపవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily