யுக்1தா1ஹாரவிஹாரஸ்ய யுக்1தசே1ஷ்ட1ஸ்ய க1ர்மஸு |
யுக்1த1ஸ்வப்1னாவபோ3த1ஸ்ய யோகோ3 ப4வதி1 து3:க2ஹா ||17||
யுக்தா--—மிதமான; ஆஹார--—உண்ணுதல்; விஹாரஸ்ய--—பொழுதுபோக்கு; யுக்த சேஷ்டஸ்ய கர்மஸு—வேலையில் சமநிலை; யுக்த—ஒழுங்குபடுத்தப்பட்ட; ஸ்வப்ன-அவபோதஸ்ய---—தூக்கம் மற்றும் விழிப்பு; யோகஹ—யோகம்; பவதி—-ஆகிறது; துஹ்க-ஹா-----துக்கங்களைக் கொல்பவர்
BG 6.17: ஆனால் உணவு மற்றும் பொழுதுபோக்கில் நிதானமாக இருப்பவர்கள், சீரான வேலையில் இருப்பவர்கள், தூக்கத்தில் சீரானவர்கள், யோக பயிற்சி செய்வதன் மூலம் அனைத்து துக்கங்களையும் குறைக்க முடியும்.
யோகம் என்பது ஆன்மா இறைவனுடன் இணைவது. யோகத்திற்கு எதிரானது போக்3, அதாவது புல பொருட்களின் இன்பங்களில் ஈடுபடுவது. சிற்றின்பங்களில் ஈடுபடுவது உடலின் இயற்கை விதிகளை மீறுகிறது. மற்றும் அதன் விளைவாக ரோக3 -- நோய் ஏற்படுகிறது. முந்தைய வசனத்தில் கூறியது போல், உடல் நோயுற்றால், அது யோகப் பயிற்சியைத் தடுக்கிறது. எனவே, இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர், மிதமான உடல் செயல்பாடுகள் மற்றும் யோகா பயிற்சி மூலம், உடல் மற்றும் மனதின் துயரங்களிலிருந்து விடுபடலாம் என்று கூறுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு இரண்டரை ஆயிரமாண்டுகளுக்குப் பிறகு, கௌதம புத்தரால் கடுமையான துறவறத்திற்கும், சிற்றின்பத்திற்கும் இடையிலான நடுப் பாதையை அவர் பரிந்துரைத்தபோது இதே அறிவுறுத்தல் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டது. இதைப் பற்றி ஒரு அழகான கதை உள்ளது:
ஞானம் பெறுவதற்கு முன்பு, கௌதம புத்தர் ஒருமுறை உண்பதையும் எதையும் குடிப்பதையும் விட்டுவிட்டு, தியானத்தில் அமர்ந்தார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சில நாட்கள் இந்த முறையில் பயிற்சி செய்த பிறகு, ஊட்டச்சத்து குறைபாடு அவரை பலவீனமாகவும் மயக்கமாகவும் ஆக்கியது, மேலும், அவர் தனது மனதை நிலைநிறுத்த முடியவில்லை. அப்போது அந்த வழியாக சில கிராமத்துப் பெண்கள் சென்று கொண்டிருந்தனர். அருகிலிருந்த ஆற்றில் இருந்து நிரப்பிய தண்ணீர் பானைகளை தலையில் சுமந்து கொண்டு அவர்கள் 'தான்புராவின் சரங்களை இறுக்குங்கள் (ஒரு சரம் கொண்ட இந்திய இசைக்கருவி, கிடாரைப் போன்றது). ஆனால் சரங்கள் உடைந்து போகும் அளவுக்கு அவர்களை இறுக்க வேண்டாம்.’ என்ற அர்த்தம் கொண்ட பாடலை பாடிக் பாடல் பாடிக்கொண்டிருந்தனர். அவர்களின் பாடலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட அவர், ‘இந்தப் படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்கள் இப்படிப்பட்ட ஞான வார்த்தைகளைப் பாடுகிறார்கள். அவை மனிதர்களாகிய நமக்கான செய்தியைக் கொண்டிருக்கின்றன. நாமும் நம் உடல்களை இறுக்கிக் கொள்ள வேண்டும் உடையிலும் பழக்க வழக்கங்களிலும் மிக்க எளிமையை கடைபிடிக்க வேண்டும், ஆனால் உடல் அழிக்கப்படும் அளவிற்கு அல்ல.' என்று தனக்கு நினைவுறுத்திக் கொண்டார்.
அமெரிக்காவின் ஸ்தாபக தந்தை ஃபெஞ்சமின் ஃபிராங்க்ளின் சுயமுயற்சியால் உயர்ந்த மனிதராகக் கருதப்படுகிறார். இருபது வயதிலிருந்தே தனது நடத்தையை மேம்படுத்தும் பொருட்டு அவர் ஒரு நாட்குறிப்பைப் பராமரித்து வந்தார், அதில் அவர் சீர்படுத்த விரும்பிய பதின்மூன்று செயல்பாடுகளுடன் தொடர்புடைய செயல்திறனைக் கண்காணித்தார். அதில் முதல் செயல்பாடாக 'நிதானம்’- மிதமான அளவில் உணவு மற்றும் மது உட்கொள்வது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.’
யுக்1தா1ஹாரவிஹாரஸ்ய யுக்1தசே1ஷ்ட1ஸ்ய க1ர்மஸு |
யுக்1த1ஸ்வப்1னாவபோ3த1ஸ்ய யோகோ3 ப4வதி1 து3:க2ஹா ||17||
ஆனால் உணவு மற்றும் பொழுதுபோக்கில் நிதானமாக இருப்பவர்கள், சீரான வேலையில் இருப்பவர்கள், தூக்கத்தில் சீரானவர்கள், யோக பயிற்சி செய்வதன் மூலம் அனைத்து துக்கங்களையும் குறைக்க முடியும்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily