யோகி3னாமபி1 ஸர்வேஷாம் மத்3க3தே1னான்த1ராத்1மனா |
ஶ்ரத்3தா4வான்ப4ஜதே1 யோ மாம் ஸ மே யுக்1த1த1மோ மத1: ||47||
யோகிநாம்-—-அனைத்து யோகிகளின்; அபி—--எனினும்; சர்வேஷாம்—--அனைத்து வகைகளும்; மத்-கதேன—-என்னில் (கடவுள்) மெய்மறந்த; அந்தஹ-----உள்; ஆத்மனா-—--மனதுடன்; ஶ்ரத்தா-வான்—--மிகுந்த நம்பிக்கையுடன்; பஜதே—--பக்தியில் ஈடுபடுபவர்; யஹ—---யார்; மாம்—---என்பால்; ஸஹ----அவர்; மே—---என்னால்; யுக்த-தமஹ-----உயர்ந்த யோகி; மதஹ-----கருதப்படுகிறது
BG 6.47: எல்லா யோகிகளிலும், யாருடைய மனம் எப்பொழுதும் என்னில் லயித்து, என் மீது மிகுந்த நம்பிக்கையுடன் பக்தியில் ஈடுபடுகிறதோ, அவர்களையே நான் உயர்ந்தவர்களாகக் கருதுகிறேன்.
யோகிகள் மத்தியில் கூட, கர்ம யோகிகள், பக்தி யோகிகள், ஞான யோகிகள், அஷ்டாங்க யோகிகள் மற்றும் பலர் உள்ளனர். இந்த வசனம் எந்த வகையான யோகம் உயர்ந்தது என்பது பற்றிய விவாதத்தை நிறுத்துகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் சிறந்த அஷ்டாங்க யோகி மற்றும் ஹட யோகிகளைக் காட்டிலும் பக்தி யோகியை மிக உயர்ந்தவர் என்று அறிவிக்கிறார். ஏனென்றால் பக்தி கடவுளின் மிக உயர்ந்த சக்தியாகும். அப்படிப்பட்ட ஒரு சக்திதான் கடவுளைப் பிணைத்து, அவரை அவருடைய பக்தனின் அடிமையாக்குகிறது. அவர் பாகவதத்தில் கூறுகிறார்:
அஹம் ப4க்1த1ப1ராதீ4னோ ஹ்யஸ்வத1ந்த்1ர இவ த்3விஜ
ஸாது4பி4ர் கி3ரஸ்த ஹ்ருத3யோ ப4க்1தை1ர் ப4க்1த1-ஜன-ப்1ரியஹ
( பா4க3வத1ம் 9.4.63)
'நான் மிகவும் சுதந்திரமானவனாக இருந்தாலும், என் பக்தர்களால் அடிமையாகி விடுகிறேன். அவர்கள் என் இதயத்தை வெல்கிறார்கள். என் பக்தர்களை பற்றி என்ன சொல்வது , என் பக்தர்களின் பக்தர்களும் கூட எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.' பக்தி யோகி தெய்வீக அன்பின் சக்தியைப் பெற்றுள்ளார், இதனால் கடவுளுக்கு மிகவும் பிரியமானவர் மற்றும் எல்லாவற்றிலும் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ப4ஜதே1 என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். இது 'சேவை' என்று பொருள்படும் ப4ஜ் என்ற மூல வார்த்தையிலிருந்து வந்தது. இது 'வழிபாடு' என்பதை விட பக்திக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தையாகும், அதாவது 'போற்றுவது' என்று பொருள்படும். இங்கு, ஸ்ரீ கிருஷ்ணர், அவரை வணங்குவது மட்டுமல்லாமல், அன்பான பக்தியுடன் சேவை செய்பவர்களைப் பற்றி பேசுகிறார். இவ்வாறு அவர்கள் ஆன்மாவின் இயற்கையான நிலையில் கடவுளின் ஊழியராக நிறுவப்பட்டுள்ளனர். மற்ற வகையான யோகிகள் இன்னும் தங்கள் உணர்தலில் முழுமையடையவில்லை; அவர்கள் தங்களை கடவுளுடன் இணைத்துக்கொண்டனர் ஆனால் அவர்கள் அவருடைய நித்திய ஊழியர்கள் என்ற புரிதலில் இன்னும் நிலைபெறவில்லை.
முக்1தா1னம் அபி1 ஸித்3தா4னாம் நாராயண-ப1ராயணஹ-
ஸு—து3ர்லப3ஹ பிரஶாந்தா1த்1மா கோடி1ஷ்வ் அபி1 மஹா-முனே
(பா4க3வத1ம் 6.14.5)
‘பரிபூரணமான மற்றும் முக்தியடைந்த பல கோடி துறவிகளில், நாராயணனிடம் பக்தி கொண்ட அமைதியான தனியொரு மனிதர் மிகவும் அரிதானவர்.’
இந்த வசனத்தைப் புரிந்துகொள்வதற்கான மற்றொரு வழி, பக்தி யோகம் கடவுளின் மிக நெருக்கமான மற்றும் முழுமையான உணர்தலை வழங்குகிறது. இது வசனம் 18.55 இல் விளக்கப்பட்டுள்ளது, பக்தி யோகி மட்டுமே கடவுளின் உண்மையான ஆளுமையை புரிந்துகொள்கிறார் என்று ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார்.
யோகி3னாமபி1 ஸர்வேஷாம் மத்3க3தே1னான்த1ராத்1மனா |
ஶ்ரத்3தா4வான்ப4ஜதே1 யோ மாம் ஸ மே யுக்1த1த1மோ மத1: ||47||
எல்லா யோகிகளிலும், யாருடைய மனம் எப்பொழுதும் என்னில் லயித்து, என் மீது மிகுந்த நம்பிக்கையுடன் பக்தியில் ஈடுபடுகிறதோ, அவர்களையே நான் உயர்ந்தவர்களாகக் கருதுகிறேன்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily