இச்1சா2த்1வேஷஸமுத்1தே2ன த்3வன்த்3வமோஹேன பா4ரத1 |
ஸர்வபூ4தா1னி ஸம்மோஹம் ஸர்கே3 யான்தி1 ப1ரந்த1ப1 ||27||
இச்சா—--ஆசை; த்வேஷ—-வெறுப்பு; ஸமுத்தேன—-எழுவதால்; த்வந்த்வா—--இருமையின்; மோஹேன-—மாயையிலிருந்து; பாரத---அர்ஜுனன், பரதத்தின் வழித்தோன்றல்; ஸர்வ—--அனைத்து; பூதானி—--உயிரினங்கள்; ஸம்மோஹம்—--மாயைக்குள்; ஸர்கே—--பிறப்பிலிருந்து; யாந்தி--—நுழைகின்றன; பரந்தப---அர்ஜுன், எதிரிகளை வென்றவன்
BG 7.27: பரத வம்சத்தில் வழித்தோன்றலே, ஆசை மற்றும் வெறுப்பு என்ற இருமைகள் மாயையிலிருந்து எழுகின்றன. எதிரிகளை வென்றவரே, ஜடப்பொருளில் உள்ள அனைத்து உயிரினங்களும் பிறப்பிலிருந்தே இவற்றால் ஏமாற்றப்படுகின்றன.
உலகம் இருமைகளால் நிறைந்துள்ளது- இரவு மற்றும் பகல், குளிர்காலம் மற்றும் கோடை காலம் , இன்பம் மற்றும் வேதனை, இன்பநுகர்வு மற்றும் துன்பம் மற்றும் பல. மிகப்பெரிய இருமைகள் பிறப்பு மற்றும் இறப்பு. இவை ஒரு ஜோடியாக உள்ளன-பிறந்த தருணம், இறப்பு நிச்சயம்; மரணம், அதையொட்டி, அடுத்தடுத்த பிறப்பைக் கொண்டுவருகிறது. மேலும் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய இரு முனைகளுக்கு இடையே வாழ்க்கையின் அரங்கம் உள்ளது. இந்த இருமைகள் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளும் எல்லோருடைய அனுபவத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்.
பொருள் உணர்வில் நாம் ஒன்றை விரும்புகிறோம் மற்றொன்றை வெறுக்கிறோம். இந்த ஈர்ப்பு மற்றும் வெறுப்பு இருமைகளின் உள்ளார்ந்த குணம் அல்ல; மாறாக, அது நமது அறியாமையிலிருந்து எழுகிறது. பொருள் இன்பம் நம் சுயநலத்தை நிறைவேற்றும் என்று நமது தவறான புத்தி உறுதியாக நம்புகிறது. வலி நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் நாம் நம்புகிறோம். பொருள் இன்பமான சூழ்நிலைகள் ஆன்மாவின் மீது பொருள் மாயையின் உறையை தடிமனாக்குகின்றன என்பதை நாம் உணரவில்லை, அதே சமயம் பாதகமான சூழ்நிலைகள் மாயையை அகற்றி மனதை உயர்த்தும் திறனைக் கொண்டுள்ளன. இந்த மாயையின் மூல காரணம் அறியாமை. ஆன்மிக ஞானத்தின் அடையாளம் என்னவென்றால், ஒரு நபர் ஈர்ப்பு மற்றும் வெறுப்பு, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் உயர்ந்து, கடவுளின் படைப்பின் பிரிக்க முடியாத அம்சங்களாக அனைத்து இருமைகளையும் ஏற்றுக்கொள்கிறார்.
இச்1சா2த்1வேஷஸமுத்1தே2ன த்3வன்த்3வமோஹேன பா4ரத1 |
ஸர்வபூ4தா1னி ஸம்மோஹம் ஸர்கே3 யான்தி1 ப1ரந்த1ப1 ||27||
பரத வம்சத்தில் வழித்தோன்றலே, ஆசை மற்றும் வெறுப்பு என்ற இருமைகள் மாயையிலிருந்து எழுகின்றன. எதிரிகளை வென்றவரே, ஜடப்பொருளில் உள்ள அனைத்து உயிரினங்களும் பிறப்பிலிருந்தே இவற்றால் ஏமாற்றப்படுகின்றன.
Sign in to save your favorite verses.
Sign Inపవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily