ஸமோஹம் ஸர்வபூ4தே1ஷு ன மே த்3வேஷ்யோஸ்தி1 ந ப்1ரிய: |
யே ப4ஜன்தி1 து1 மாம் ப4க்1த்1யா மயி தே1 தே1ஷு சா1ப்1யஹம் ||29||
ஸமஹ——சமமாக பாவிக்கிறேன்; அஹம்——நான்; ஸர்வ—பூதேஷு——எல்லா உயிர்களுக்கும்; ந——யாரும் இல்லை; மே--—எனக்கு;த்வேஷ்யஹ—-விரோதமான அஸ்தி--—இருக்கிறது; ந—இல்லை; ப்ரியஹ--பிரியமான; யே——யார்; பஜந்தி——அன்புடன் வணங்குகிறார்களோ; து——ஆனால்; மாம்——என்னை; பக்த்யா——பக்தியுடன்; மயி——என்னில் வசிக்கிறார்கள்; தே—-அத்தகைய நபர்கள்; தேஷு——அவர்களில்; ச——மற்றும்; அபி——மேலும்; அ-ஹம்—-—நான் ( ந—ப்ரியஹ—உற்றவரில்லை
BG 9.29: நான் எல்லா உயிர்களையும் சமமாகவே பாவிக்கிறேன்; நான் நான் யாரிடமும் பாரபட்சம் மற்றும் விரோதம் பாராட்டுவதில்லை. ஆனால் அன்புடன் என்னை வணங்கும் பக்தர்கள் என்னில் வசிக்கிறார்கள், நான் அவர்களில் வசிக்கிறேன்.
கடவுள் இருந்தால், அவர் முற்றிலும் நீதியுள்ளவராக இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் உள்ளுணர்வுடன் நம்புகிறோம்; அநீதியான கடவுள் இருக்க முடியாது. உலகில் அநீதியால் அவதிப்படும் மக்கள், 'மிஸ்டர் பில்லியனர், உங்கள் பக்கம் பண பலம் உள்ளது நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். கடவுள் நம் சர்ச்சையை தீர்த்து வைப்பார். அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் கண்டிப்பாக உன்னை தண்டிப்பார். உங்களால் தப்பிக்க முடியாது.’ இந்த வகையான அறிக்கை செய்பவர் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட ஒரு துறவி என்பதைக் குறிக்கவில்லை. ஏனென்றால் கடவுள் முற்றிலும் நீதியுள்ளவர் என்று சாதாரண மக்கள் கூட நம்புகிறார்கள்.
எவ்வாறாயினும், ஸ்ரீ கிருஷ்ணரின் முந்தைய வசனம், கடவுள் தம் பக்தர்களிடம் பாரபட்சமாக இருக்கிறார் என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது, ஏனெனில் அனைவரும் கர்மாவின் சட்டத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கும்பொழுது, கடவுள் தனது பக்தர்களை அதிலிருந்து விடுவிக்கிறார். இது பாரபட்சத்தின் குறைபாட்டின் அறிகுறியல்லவா? ஸ்ரீ கிருஷ்ணர் இந்த விஷயத்தை தெளிவுபடுத்துவது அவசியம் என்று உணர்ந்து, ஸமோஹம் என்று வசனத்தைத் தொடங்குகிறார், அதாவது, 'இல்லை, இல்லை, நான் அனைவருக்கும் சமம். ஆனால் நான் ஒரு சீரான சட்டத்தை வைத்திருக்கிறேன், அதற்கு நான் என் அருளை வழங்குகிறேன்.’ இந்தச் சட்டம் முன்பு 4.11 வசனத்தில் கூறப்பட்டது: எந்த வழியில் மக்கள் என்னிடம் சரணடைகிறார்களோ, அதற்கேற்ப நான் கைமாறு செய்கிறேன். ப்ருதையின் மகனே, தெரிந்தோ தெரியாமலோ எல்லோரும் என் வழியைப் பின்பற்றுகிறார்கள்.
மழைநீர் பூமியில் சமமாக விழுகிறது. ஆனாலும், சோள வயல்களில் விழும் துளி தானியமாக மாறுகிறது; பாலைவனப் புதரில் விழும் துளி முள்ளாக மாறும்; சாக்கடையில் விழும் துளி அழுக்கு நீராகும்; மேலும் சிப்பியில் விழும் துளி முத்து ஆகிவிடும். நிலத்திற்கு தன் அருளை வழங்குவதில் மழை சமமாக இருப்பதால், மழைக்கு எந்தப் பாரபட்சமும் இல்லை. மழைத்துளிகளை பெரும் பொருள்களின் இயல்புகளின் விளைவாக ஏற்படும் மாறுபாட்டிற்கு மழைத்துளிகள் பொறுப்பேற்க முடியாது. அவ்வாறே, கடவுள் எல்லா உயிர்களிடத்தும் சமமான மனப்பான்மை கொண்டவர் என்றாலும், அவரை விரும்பாதவர்களின் இதயங்கள் அவருடைய அருளைப் பெருவதற்குத் தகுதியற்றவை என்பதால் அவருடைய அருளை பெருவது இல்லை என்று இங்கே கூறுகிறார் . எனவே, இதயம் தூய்மையற்றவர்கள் என்ன செய்ய முடியும்? ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது பக்தியின் தூய்மைப்படுத்தும் சக்தியை வெளிப்படுத்துகிறார்.
ஸமோஹம் ஸர்வபூ4தே1ஷு ன மே த்3வேஷ்யோஸ்தி1 ந ப்1ரிய: |
யே ப4ஜன்தி1 து1 மாம் ப4க்1த்1யா மயி தே1 தே1ஷு சா1ப்1யஹம் ||29||
நான் எல்லா உயிர்களையும் சமமாகவே பாவிக்கிறேன்; நான் நான் யாரிடமும் பாரபட்சம் மற்றும் விரோதம் பாராட்டுவதில்லை. ஆனால் அன்புடன் என்னை வணங்கும் பக்தர்கள் என்னில் வசிக்கிறார்கள், நான் …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily