Bhagavad Gita: Chapter 11, Verse 21

அமீ ஹி த்1வாம் ஸுரஸங்கா4 விஶந்தி1 கே1சித்3பீ4தா1: ப்1ராஞ்ஜலயோ க்3ருணந்தி1 |

ஸ்வஸ்தீ1த்1யுக்1த்1வா மஹர்ஷிஸித்34ஸங்கா4: ஸ்து1வந்தி1 த்1வாம் ஸ்து1திபி4: புஷ்க1லாபி4: ||21||

அமீ—--இவை; ஹி--—உண்மையில்; த்வாம்—--உங்களில்; ஸுர---ஸங்காஹா—-தேவலோக தெய்வங்களும் க; விஶந்தி—--நுழைகிறார்கள்; கேசித்--—சிலர்; பீதாஹா—--பயத்தில்; ப்ராஞ்ஜலயஹ--—கூப்பிய கைகளுடன்; கிருணந்தி--—புகழ்கின்றனர்; ஸ்வஸ்தி-—-மங்களகரமான; இதி--—இவ்வாறு; உக்த்வா--—பாராயணம் செய்து; மஹா-ரிஷி—---சிறந்த முனிவர்கள்; ஸித்த—-ஸங்காஹா-—சிறந்த மனிதர்கள்; ஸ்துவந்தி—--புகழ்கிறார்கள்; த்வாம்—--உங்களை ஸ்துதிபிஹி---பிரார்த்தனைகளால்; புஷ்கலாபிஹி---கீர்த்தனைகளால்

Translation

BG 11.21: அனைத்து தேவலோக தெய்வங்களும் உங்களுள் நுழைவதன் மூலம் உங்களிடம் அடைக்கலம் பெறுகின்றன. இனி, சிலர் கூப்பிய கரங்களுடன் உங்களைப் புகழ்கிறார்கள். சிறந்த முனிவர்களும், குறைபாடற்ற மனிதர்களும் மங்களகரமான துதிகளாலும், அபரிமிதமான ஜெபங்களாலும் உங்களைபப் போற்றுகிறார்கள்.

Commentary

அர்ஜுனன் இங்கே ஸ்ரீ கிருஷ்ணரின் கா1லரூப1த்தை, அதாவது காலத்தை விழுங்கும் அவரது வடிவத்தைக் காண்கிறார். முன்னேறும் காலத்தின் தாக்குதல் தேவலோக தெய்வங்கள் உட்பட மிகப் பெரிய ஆளுமைகளைக் கூட விழுங்குகிறது. கடவுளின் கால வடிவத்திற்கு (காலாரூபத்தை) அடிபணிந்து, கூப்பிய கைகளுடன் அவர்கள் ப்ரபஞ்ச வடிவில் நுழைவதை அர்ஜுனன் பார்க்கிறார். அதே சமயம், முனிவர்களும் பரிபூரண ஆத்மாக்களும் தங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களால் இறைவனைப் போற்றுவதைக் காண்கிறார்.