Bhagavad Gita: Chapter 11, Verse 43

பி1தா1ஸி லோக1ஸ்ய ச1ராச1ரஸ்ய த்1வமஸ்ய பூ1ஜ்யஶ்ச1 கு3ருர்க3ரீயான் |

நத்1வத்1ஸமோ‌ஸ்த்1யப்4யதி41: கு1தோ1‌ன்யோ லோக1த்1ரயே‌ப்1யப்1ரதி1மப்1ரபா4வ ||43||

பிதா—-தந்தை; அஸி --—நீங்கள்; லோகஸ்ய—--முழு பிரபஞ்சத்தின்; சர—--அசையும்; அசரஸ்ய--—அசையாத; த்வம்--—நீங்கள்; அஸ்ய—--இதன்; பூஜ்யஹ--—வணங்கத்தக்க; ச--—மற்றும்; குருஹு---ஆன்மீக குரு; கரியான்---—புகழ் வாய்ந்த; ந—இல்லை; த்வத்-ஸமஹ—--உங்களுக்கு சமம்; அஸ்தி—---ஆகும்; அப்யதிகஹ—--பெரிய; குதஹ--—யார்; அன்யஹ--—வேறு; லோக-த்ரயே—--மூன்று உலகங்களிலும்; அபி—கூட; அப்ரதிமா-பிரபாவா----ஒப்பற்ற சக்தி உடையவர்

Translation

BG 11.43: நீங்கள் முழு பிரபஞ்சத்தின், அனைத்து அசையும் மற்றும் அசையாத உயிரினங்களின் தந்தை. நீங்கள் வழிபாட்டிற்கு மிகவும் தகுதியானவர் மற்றும் ஒப்புயர்வற்ற ஆன்மீக குரு. மூன்று உலகங்களிலும் உமக்கு நிகரான எவரும் இல்லாதபொழுது, ​​ஒப்பற்ற சக்தியை உடையவரே, உங்களைவிட மகத்தானவர் யார் இருக்க முடியும்?

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாரிலும் மேலானவர் மற்றும் மூத்தவர் என்று அர்ஜுனன் கூறுகிறார். தந்தை எப்பொழுதும் மகனை விட மூத்தவர். ஸ்ரீ கிருஷ்ணர் தந்தையின் தந்தை ... இருக்கும் அனைத்து தந்தையர்களுக்கும். இதேபோல், தற்பொழுது இருக்கும் அனைத்து ஆன்மீக குருமார்களின் ஆன்மீக குரு ஆவார். முதல் ஆன்மீக குரு படைப்பாளர் ப்ரஹ்மா தனது சீடருக்கு அறிவைக் கொடுத்தார், அதன்பிறகு பாரம்பரியம் தொடர்ந்தது.. இருப்பினும், ப்ரஹ்மா ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து வேத அறிவைப் பெற்றார். ஸ்ரீமத் பாகவதம் (1.1.1) கூறுகிறது: தே1ன ப்3ரஹ்ம ஹ்ருதா3 ய ஆதி3-க1வயே

'ஸ்ரீ கிருஷ்ணர் முதல் பிறந்த ப்ரஹ்மாவின் இதயத்தில் வேத அறிவைப் புகட்டினார்.' எனவே, அவர் உச்ச ஆன்மீக குரு. ஸ்வேதாஷ்வதர உபநிஷதம் கூறுகிறது:

ந த1த்1ஸமஶ்சா1ப்4யாதி41ஶ்ச1 த்3ரிஷ்யதே1(6.8)

‘கடவுளுக்கு நிகரானவர் எவரும் இல்லை, அவரை விட உயர்ந்தவர் எவரும் இல்லை.’ ஸ்ரீ கிருஷ்ணரும் அதே வேதங்களின் ஒப்புயர்வற்ற இறைவனாக இருப்பதை உணர்ந்து, அர்ஜுனன் அவரது பண்புகளை இங்கு விளக்குகிறார்.