Bhagavad Gita: Chapter 11, Verse 6

1ஶ்யாதி3த்1யான்வஸூன்ருத்3ரானஶ்வினௌ மருத1ஸ்த1தா2 |

3ஹூன்யத்3ருஷ்ட1பூ1ர்வாணி ப1ஶ்யாஶ்ச1ர்யாணி பா4ரத1 ||6||

பஶ்ய--—காண்பாய்; ஆதித்யான்--—அதிதியின் (பன்னிரண்டு) மகன்களை; வஸூன்--—(எட்டு) வஸூக்களை; ருத்ரான்—--(பதினொரு) ருத்ரர்களை; அஶ்வினௌ—(இரட்டை) அஶ்வினி குமார்களை; மருதஹ----(நாற்பத்தொன்பது) மருதர்களை; ததா—-மற்றும்; பஹூனி--—பல; அத்ரிஷ்ட--—ஒருபொழுதும் வெளிப்படுத்தப்படாத; பூர்வாணி--—இதுவரை; பஶ்ய----காண்பாய்; ஆஶ்சர்யாணி--—அதிசயங்களை; பாரத---அர்ஜுனன்----பரதர்களின் வாரிசு

Translation

BG 11.6: ஓ பரத வம்சத்தில் தோன்றியவனே! அதிதியின் (பன்னிரண்டு) மகன்கள், (எட்டு) வஸூக்கள் (பதினொரு) ருத்ரர்கள், (இரண்டு) அஸ்வினி குமாரர்கள் மற்றும் அதுபோல் (நாற்பத்தொன்பது) மருதுகள் மற்றும் இதுவரை வெளிப்படுத்தப்படாத மற்ற அதிசயங்களை இப்பொழுது என்னில் பார்.

Commentary

இறைவனின் ப்ரபஞ்ச வடிவில் பூமியில் இருக்கும் அதிசயங்கள் மட்டுமின்றி, இதுவரை ஒன்றாகக் காணப்படாத உயர்ந்த கிரக அமைப்புகளில் இருக்கும் அதிசயங்களும் உள்ளன, தேவலோகக் தெய்வங்கள் அனைவரும் அவரது தெய்வீக வடிவத்தின் சிறிய துண்டுகள் என்பதை அவர் மேலும் வெளிப்படுத்துகிறார்; அவர் பன்னிரண்டு ஆதி 3த்1யர்கள், எட்டு வஸூக்கள், பதினொரு ருத்3ரர்கள், இரண்டு அஸ்வினி குமாரர்கள் மற்றும் தன்னுள்ளே உள்ள நாற்பத்தொன்பது மருதங்களைக் காட்டுகிறார்.

அதிதியின் பன்னிரண்டு மகன்கள்: த41, மித்1ர, ஆர்யம, ஸக்1ர, வருண, அம்ஶ, ப43, விவஸ்வன், பூ1ஷ, ஸவி1த, த்1வஷ்ட1 மற்றும் வாமன. எட்டு வஸூக்கள்: தா3ர, து4ருவ், சோம, ஆஹ, அனில, அனலா, ப்1ரத்யுஷ் மற்றும் ப்1ரபா4ஸ.

பதினொரு ருத்3ரர்கள்: ஹர, ப3ஹுரூப1, த்1ரயம்ப31, அபராஜிதா1, விருஸக1பி, ஷம்பு, க11ர்டீ3, ரைவத1, மிரு3கவ்யத3, ஸ்ர்வ மற்றும் க3பா3லி. இரு இரட்டைப் பிறவி அஸ்வினி குமாரர்கள் தேவலோக தேவர்களின் வைத்தியர்கள்.

நாற்பத்தொன்பது மருதுகள் (காற்று தெய்வங்கள்): சத்வஜோதி, ஆதித்ய, சத்யஜோதி, திர்யக்ஜோதி, ஸஜ்யோதி, ஜோதிஷ்மன், ஹரிதா, ரிதஜித், ஸத்யஜித், சுஷேனா, சேனாஜித், ஸத்யமித்ரா, அபிமித்ரா, ஹரிமித்ரா, கிருதா, ஸத்ய, விதர், த்ருவ் , த்வாந்தா, துனி, உக்ரா, பீமா, அபியு, ஸாக்ஷிபா, இத்ரிக், அன்யத்ரிக், யாத்ரிக், ப்ரதிக்ரித், ரிக், ஸமிதி, ஸம்ரம்ப, இத்ரிக்ஷா, புருஷ, அன்யத்ரிக்ஷா, சேதஸ, ஸமிதா, ஸமித்ரிக்ஷ, பிரதித்ரிக்ஷ, மாருதி, ஸாரத, யஜு தேவ, திஷா, அனுத்ரிக், ஸாமா, மனுஶ மற்றும் விஶ.