Bhagavad Gita: Chapter 14, Verse 14-15

யதா3 ஸத்1த்1வே ப்1ரவ்ருத்3தே4 து1 ப்1ரலயம் யாதி1 தேஹப்4ருத்1 |

1தோ3த்11மவிதா3ம் லோகா1னமலான்ப்1ரதி11த்3யதே1 ||14||
ரஜஸி ப்1ரலயம் க3த்1வா க1ர்மஸங்கி3ஷு ஜாயதே1 |

1தா2 ப்1ரலீனஸ்த1மஸி மூட4யோனிஷு ஜாயதே1 ||15||

யதா--—எப்போது; ஸத்வே--—நன்மை முறை; ப்ரவ்ரித்தே--—மேலோங்கும் போது; து--—உண்மையில்; பிரளயம்--—இறப்பு; யாதி----அடைந்தால்; தேஹ-பிரித்---—உடலுற்றது; ததா--—பின்னர்; உத்தம-விதாம்—--கற்றவர்களின்; லோகான்—--தங்குமிடங்களை; அமலான்—--தூய்மையான; ப்ரதிபத்யதே--—அடைகிறது; ரஜஸி---ஆர்வத்தின் முறையில்; பிரளயம்---—இறப்பு; கத்வா---அடைந்து; கர்ம-ஸங்கிஷு--—வேலையால் உந்தப்பட்ட மக்களிடையே; ஜாயதே---— பிறக்கிறார்கள்.; ததா--—அதேபோல்; ப்ரலீனஹ--—இறக்கின்ற; தமஸி--—அறியாமை முறையில்; மூடயோனிஷு---—விலங்குகளின் ராஜ்யத்தில்; ஜாயதே----பிறக்கிறது

Translation

BG 14.14-15: நன்மை முறையின் ஆதிக்கத்தால் இறந்தவர்கள், கற்றவர்களின் தூய இருப்பிடங்களை (உணர்ச்சி மற்றும் அறியாமை இல்லாத) அடைகிறார்கள். பேரார்வம் அதிகமாகி இறப்பவர்கள் வேலையால் உந்தப்பட்ட மக்களிடையே பிறக்கிறார்கள், அறியாமையால் இறப்பவர்கள் மிருக ராஜ்யத்தில் பிறக்கிறார்கள்.

Commentary

ஆன்மாவின் விதி அவரது ஆளுமையின் குணங்களை அடிப்படையாகக் கொண்டது என்று ஸ்ரீ கிருஷ்ணர் தெரிவிக்கிறார். நாம் பெறுவது நமது தகுதியின் அடிப்படையில் மட்டுமே என்பதே கடவுளின் சட்டம்-கர்மாவின் சட்டம். நற்பண்புகள், அறிவு மற்றும் பிறருக்கு சேவை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டவர்கள் பக்தியுள்ளவர்கள், அறிஞர்கள் மற்றும் சமூக சேவையாளர்களின் குடும்பங்களில் பிறக்கிறார்கள்.. இல்லையெனில், அவர்கள் உயர்ந்த தேவலோக இருப்பிடங்களுக்கு செல்கிறார்கள். பேராசை, மற்றும் உலக லட்சியங்களால் தங்களை சூழப்பட அனுமதித்தவர்கள் தீவிரமாக பொருள் ஈட்டுவதில் ஈடுபடும் குடும்பங்களில் பிறக்கிறார்கள். பெரும்பாலும், அவர்கள் வணிக வர்க்கத்தை சேர்ந்தவர்கள். போதை, வன்முறை, சோம்பேறித்தனம் மற்றும் கடமை தவறியவர்கள் குடிகாரர்கள் மற்றும் படிப்பறிவற்றவர்களின் குடும்பங்களில் பிறக்கிறார்கள். இல்லையெனில் அவர்கள் பரிணாம ஏணியில் கீழே கீழே செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டு விலங்கு இனங்களில் பிறக்கின்றனர்.

ஒருமுறை மனித உருவத்தை அடைந்துவிட்டால், மீண்டும் தாழ்ந்த உயிரினங்களுக்குள் நழுவ முடியுமா என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். மனித வடிவம் ஆன்மாவுக்கு நிரந்தரமாக ஒதுக்கப்படவில்லை என்பதை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. இதனால், அனைத்து பாதைகளும் எப்போதும் திறந்தே இருக்கும். ஆன்மா தனது ஆன்மீக பரிணாம வளர்ச்சியில் மேலே ஏறலாம், அதே நிலையில் இருக்க முடியும் அல்லது அது ஏற்றுக்கொள்ளும் குணங்களின் தீவிரம் மற்றும் செயல்கள் ஆத்மாவால் செய்யப்பட்டன என்பதின் அடிப்படையில் கீழே சரியலாம்.