Bhagavad Gita: Chapter 16, Verse 23

ய: ஶாஸ்த்1ரவிதி4முத்1ஸ்ருஜ்ய வர்த1தே1 கா1மகா1ரத: |

ந ஸ ஸித்3தி4மவாப்1னோதி1 ந ஸுக2ம் ந ப1ராம் க3தி1ம் ||23||

யஹ--—யார்; ஶாஸ்திர—விதிம்--—வேத கட்டளைகளை; உத்ஸ்ரிஜ்ய--—அகற்றி; வர்ததே--—செயல்படுபவர்கள்; காம-காரதஹ---—ஆசையின் தூண்டுதலின் கீழ்; ந--—இல்லை; ஸஹ---—அவர்கள்; ஸித்திம்---—முழுமையை; அவாப்நோதி---—அடைவர்; ந--—இல்லை; ஸுகம்--—மகிழ்ச்சியை; ந--—இல்லை; பராம்---உயர்ந்த; கதிம்--— இலக்கை

Translation

BG 16.23: வேதங்களின் கட்டளைகளை உதறித் தள்ளிவிட்டு, ஆசையின் தூண்டுதலின் கீழ் செயல்படுபவர்கள், வாழ்க்கையில் முழுமையையோ, மகிழ்ச்சியையோ, அல்லது உயர்ந்த இலக்கையோ அடைவதில்லை.

Commentary

வேதங்கள் ஞானத்தை நோக்கிய பயணத்தில் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டிகள். அவை நமக்கு அறிவையும் புரிதலையும் தருகின்றன. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதற்கான வழிமுறைகளையும் அவை நமக்கு வழங்குகின்றன. இந்த அறிவுறுத்தல்கள் இரண்டு வகையானவை-விதி மற்றும் நிஷேத். சில செயல்பாடுகளைச் செய்வதற்கான கட்டளைகள் விதி எனப்படும். செய்யக்கூடாத செயல்களை பற்றிய கட்டளைகள் நிஷேத் என்று அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு வகையான கட்டளைகளையும் உண்மையாகப் பின்பற்றுவதன் மூலம், மனிதர்கள் தவறற்ற நிலையை நோக்கிச் செல்ல முடியும். ஆனால் அஸுரர்களின் வழிகள் வேதத்தின் போதனைகளுக்கு நேர்மாறானவை. அவர்கள் தடைசெய்யப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட செயல்களைத் தவிர்க்கிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அத்தகையவர்களைக் குறிப்பிட்டு, அங்கீகரிக்கப்பட்ட பாதையைத் துறந்து, தங்களது ஆசைகளின் தூண்டுதல்படி செயல்படுபவர்கள் உண்மையான அறிவையோ, மகிழ்ச்சியின் பரிபூரணத்தையோ, பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையையோ அடைய முடியாது. என்று அறிவிக்கிறார்