ஶ்ரத்3த4யா ப1ரயா த1ப்1த1ம் த1ப1ஸ்த1த்1த்1ரிவித4ம் நரை: |
அப2லாகா1ங்க்ஷிபி4ர்யுக்1தை1:ஸாத்1த்1விக1ம் ப1ரிச1க்ஷதே1 ||17||
ஶ்ரத்தயா--—நம்பிக்கையுடன்; பரயா--—ஆழ்ந்த; தப்தம்--—பயிற்சி; தபஹ--—துறவுகளை; தத்—அது; திரி-விதம்—மூன்று விதம்; நரைஹி---நபர்களால்; அஃபல-ஆகாங்க்ஷிபிஹி--—பொருள் பலன்களுக்காக ஏங்காமல்;யுக்தைஹி---உறுதியான; ஸாத்விகம்-----நற்குணத்தின்முறையில்; பரிசக்ஷதே--—குறிப்பிடப்பட்டவை.
BG 17.17: தீவிர நம்பிக்கை கொண்ட பக்தியுள்ள நபர்கள் பொருள் பலன்களுக்காக ஏங்காமல் இந்த மூன்று மடங்கு துறவுகளை கடைப்பிடிக்கும்போது, அவர்கள் முறையில் செய்யப்பட்ட துறவரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
உடல், பேச்சு மற்றும் மனம் ஆகியவற்றின் துறவறங்களை வரையறுத்த ஸ்ரீகிருஷ்ணர், இப்போது அவை நன்மையின் முறையில் நிகழ்த்தப்படும்போது அவற்றின் குணாதிசயங்களைக் குறிப்பிடுகிறார் .துறவரங்களின் செயல் திறனில் இருந்து பொருள் பலன்களை தேடும்போது அதன் புனிதத்தன்மையை இழக்கிறது என்று அவர் கூறுகிறார். வெகுமதிகள் மீது பற்று இல்லாமல், தன்னலமற்ற முறையில் இது செய்யப்பட வேண்டும். மேலும், துறவரங்களின் அருமை மற்றும் அதன் மீதான நமது நம்பிக்கை வெற்றி மற்றும் தோல்வி இரண்டிலும் உறுதியாக இருக்க வேண்டும், மேலும் சோம்பேறித்தனம் அல்லது சிரமத்தின் காரணமாக அதன் நடைமுறையை நிறுத்திவிடக்கூடாது.
ஶ்ரத்3த4யா ப1ரயா த1ப்1த1ம் த1ப1ஸ்த1த்1த்1ரிவித4ம் நரை: |
அப2லாகா1ங்க்ஷிபி4ர்யுக்1தை1:ஸாத்1த்1விக1ம் ப1ரிச1க்ஷதே1 ||17||
தீவிர நம்பிக்கை கொண்ட பக்தியுள்ள நபர்கள் பொருள் பலன்களுக்காக ஏங்காமல் இந்த மூன்று மடங்கு துறவுகளை கடைப்பிடிக்கும்போது, அவர்கள் முறையில் செய்யப்பட்ட துறவரங்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
Sign in to save your favorite verses.
Sign Inపవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily