Bhagavad Gita: Chapter 18, Verse 44

க்1ருஷிகௌ3ரக்ஷ்யவாணிஜ்யம் வைஶ்யக1ர்ம ஸ்வபா4வஜம் |

1ரிச1ர்யாத்1மக1ம் க1ர்ம ஶூத்1ரஸ்யாபி1 ஸ்வபா4வஜம் ||44||

க்ருஷி---—விவசாயம்; கௌ-ரக்ஷ்ய--—பால்பண்ணை; வாணிஜ்யம்--—வணிகம்; வைஶ்ய—--வணிகர் மற்றும் விவசாய வர்க்கத்தினரின்; கர்ம--—வேலை; ஸ்வபாவ-ஜம்-—ஒருவரின் உள்ளார்ந்த குணங்களால் பிறந்தது;பரிசர்யா--—பணியின் மூலம் சேவை செய்வது; ஆத்மகம்--—இயல்பான; கர்ம--—கடமை; ஶூத்ரஸ்ய—தொழிலாளர் வர்க்கத்தினரின்; அபி--—மற்றும்; ஸ்வபாவ-ஜம்----ஒருவரின் உள்ளார்ந்த குணங்களால் பிறந்தது.

Translation

BG 18.44: விவசாயம், பால் பண்ணை மற்றும் வணிகம் ஆகியவை வைசியர்களின் குணங்களைக் கொண்ட இயற்கை வேலைகள். பணியின் மூலம் சேவை செய்வது ஶூத்திரர்களின் குணங்களைக் கொண்டவர்களின் இயல்பான கடமையாகும்.

Commentary

வைசியர்கள் தமோ (அறியாமை) குணத்தின் கலவையுடன் கூடிய ஆர்வ முறையின் இயல்புகளைக் கொண்டவர்கள். அவர்கள் வணிகம் மற்றும் விவசாயம் மூலம் பொருளாதார செல்வத்தை உற்பத்தி செய்வதிலும் சொந்தமாக வைத்திருப்பதிலும் முனைந்தனர். அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தி மற்ற வகுப்பினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கினர். சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினருடன் தங்களுடைய செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக அவர்கள் தொண்டு திட்டங்களை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஶுத்திரர்கள் அறியாமையின் இயல்புகளை உடையவர்கள். அவர்கள் புலமை, நிர்வாகம் அல்லது வணிக நிறுவனத்தில் ஈர்கப்படவில்லை. அவர்களின் அழைப்புக்கு ஏற்ப சமுதாயத்திற்கு சேவை செய்வதே அவர்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த வழியாக இருந்தது. கைவினைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வேலை-தொழிலாளர்கள், தையல்காரர்கள், கை தொழில் செய்பவர்கள் , முடி திருத்துபவர்கள் மற்றும் பிற ஒத்த தொழில்கள் இந்த வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.