Bhagavad Gita: Chapter 18, Verse 58

மச்1சி1த்11:ஸர்வது3ர்கா3ணி மத்1ப்1ரஸாதா3த்11ரிஷ்யஸி |

அத2 சே1த்1த்1வமஹங்கா1ரான்ன ஶ்ரோஷ்யஸி வினங்க்ஷ்யஸி ||58||

மத்-சித்தஹ----எப்போதும் என்னை நினைவு செய்வதன் மூலம்; ஸர்வ—--அனைத்து; துர்காணி--— சிரமங்களையும்; மத்-ப்ரஸாதாத்--—என் அருளால்; தரிஷ்யஸி---—நீ வெல்வாய்; அத--—ஆனால்; சேத்--—என்றால்; த்வம்—--நீ; அஹங்காராத்--—பெருமையின் காரணமாக; ந ஶ்ரோஷ்யஸி—--கேட்கவில்லை; வினங்க்ஷ்யஸி--—நீ அழிந்துவிடுவாய்..

Translation

BG 18.58: நீ எப்போதும் என்னை நினைவு செய்தால், என் அருளால் நீ தடைகளையும் சிரமங்களையும் வெல்வாய். ஆனால், பெருமையின் காரணமாக, நீ அறிவுரையைக் கேட்கவில்லை என்றால், நீ அழிந்துவிடுவாய்.

Commentary

முந்தைய வசனத்தில் அர்ஜுனனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய ஸ்ரீ கிருஷ்ணர், அவருடைய அறிவுரையைப் பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளையும், அதைப் பின்பற்றாததால் ஏற்படும் விளைவுகளையும் அறிவிக்கிறார். ஆத்மா எந்த வகையிலும் கடவுளில் இருந்து சுயாதீனமானதாக உள்ளது நினைக்கக்கூடாது. இறைவனிடம் மட்டுமே மனதை நிலைநிறுத்தி இறைவனிடம் முழு அடைக்கலம் பெற்றால், அவருடைய அருளால், எல்லாத் தடைகளும், கஷ்டங்களும் தீரும். ஆனால், கடவுள் மற்றும் வேதங்களின் நித்திய ஞானத்தை விட நமக்கு நன்றாகத் தெரியும் என்று நினைத்து, மாயையின் காரணமாக, அறிவுரைகளைப் புறக்கணித்தால், மனித வாழ்க்கையின் இலக்கை அடையத் தவறிவிடுவோம், ஏனென்றால் கடவுளுக்கு மேலானவர்கள் யாரும் இல்லை, மேலும் சிறந்த அறிவுரை எதுவும் இல்லை.