Bhagavad Gita: Chapter 18, Verse 75

வ்யாஸப்1ரஸாதா3ச்1ச்2ருத1வானேத1த்3கு3ஹ்யமஹம் ப1ரம் |

யோக3ம் யோகே3ஶ்வராத்1க்1ருஷ்ணாத்1ஸாக்ஷாத்112யத1:ஸ்வயம் ||75||

வ்யாஸ-ப்ரஸாதாத்—--வேத வியாஸரின் அருளால்; ஶ்ருதவான்—--கேட்டேன்; ஏதத்—இதை; குஹ்யம்--— ரகசியமான; அஹம்—--நான்; பரம்—--உயர்ந்த; யோகம்—--யோக; யோக-ஈஸ்வராத்--—யோகத்தின் இறைவனிடமிருந்து; க்ரிஷ்ணாத்----ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து; ஸாக்ஷாத்—--நேரடியாக; கதையதஹ—-பேசுவது; ஸ்வயம்—---அவராகவே

Translation

BG 18.75: வேத வியாசரின் அருளால், இந்த உன்னதமான மற்றும் மிகவும் ரகசியமான யோகத்தை நான் யோகத்தின் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பேசியதைக்கேட்டேன்.

Commentary

முனிவர் வேத வியாஸர் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணர் த்வைபாயன் வியாஸதேவ், ஸஞ்ஜயனின் ஆன்மீக குருவாக இருந்தார். தனது குருவின் அருளால், ஸஞ்ஜயன் ஹஸ்தினாபூர் அரச மாளிகையில் அமர்ந்திருந்து குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் நடந்த அனைத்தையும் அறியும் ஞான சக்தியைப் பெற்றார். இங்கே, ஸஞ்ஜயன் தனது குருவின் கருணையால் தான் யோகத்தின் அதியுயர் அறிவியலை யோக இறைவனிடமிருந்தே கேட்கும் வாய்ப்பைப் பெற்றதாக ஒப்புக்கொள்கிறார்.

ப்ரஹ்ம ஸுத்திரங்கள், பதினெட்டு புராணங்கள், மகாபாரதம் மற்றும் பிற நூல்களின் ஆசிரியர் வேத வியாஸ் கடவுளின் வழித்தோன்றல் மற்றும் அனைத்து தெளிவான சக்திகளையும் தன்னகத்தே கொண்டவர். இவ்வாறு, அவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அர்ஜுன்னுக்கும் இடையேயான உரையாடலைக் கேட்டது மட்டுமல்லாமல், ஸஞ்ஜயன் மற்றும் திருதராஷ்டிரருக்கு இடையேயான உரையாடலையும் கேட்டார். இதன் விளைவாக, அவர் பகவத் கீதையை தொகுக்கும்போது இரண்டு உரையாடல்களையும் சேர்த்தார்.