Bhagavad Gita: Chapter 2, Verse 34

அகீ1ர்தி1ம் சா1பி பூ4தா1னி க12யிஷ்யன்தி1 தே1‌வ்யயாம் |

ஸம்பா4வித1ஸ்ய சா1கீ1ர்தி1ர்மரணாத3தி1ரிச்1யதே1 ||34||

அகீர்திம்—--இகழ்ச்சி; ச அபி—மேலும்;பூதானி—--மக்கள்; கதயிஷ்யன்தி-—பேசுவார்கள்; தே—--உன்னைப் பற்றி; அவ்யயாம்—-- என்றென்றும்; ஸம்பாவிதஸ்ய—--ஒரு மரியாதைக்குரிய நபருக்கு; ச—--மற்றும்; அகீர்திஹி—- இகழ்ச்சி;  மரணாத்—--மரணத்தை விட;  அதிரிச்யதே—-- அதிகமானது.

Translation

BG 2.34: மக்கள் உன்னை கோழை, படைத்துறை விட்டோடுபவன் என்று பேசுவார்கள். ஒரு மரியாதைக்குரிய நபருக்கு, இழிபழி மரணத்தை விட மோசமானது.

Commentary

மரியாதைக்குரிய நபர்களுக்கு, சமூக கௌரவம் மிகவும் முக்கியமானது. போர்வீரர்களின் குறிப்பிட்ட குணங்கள் குறிப்பாக (இயற்கையின் முறைகள்) மரியாதை மற்றும் நன்மதிப்பு அவர்களுக்கு இன்றியமையாத ஒன்றாகிறது .அர்ஜுனன் உயர்ந்த அறிவால் ஈர்க்கப்படாவிட்டாலும் தாழ்ந்த அறிவால் ஈர்க்கப்படுவார் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் இதை அர்ஜுனனுக்கு நினைவூட்டுகிறார்.

கோழைத்தனத்தால் போர்க்களத்தை விட்டு ஓடும் வீரன் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறான். அர்ஜுனன் தன் கடமையைத் தவிர்த்தால் அவப்பெயரும் இகழ்ச்சியும் அனுபவிக்க நேரிடும்.

Watch Swamiji Explain This Verse