ஶ்ரீப4க3வானுவாச1 |
லோகே1ஸ்மின்த்3விவிதா4 நிஷ்டா2 பு1ரா ப்1ரோக்1தா1 மயானக4 |
ஞானயோகே3ன ஸாங்யானாம் க1ர்மயோகே3ன யோகி3னாம் ||3||
ஶ்ரீ-பகவான் உவாச—--இறைவன் கூறினார்:; லோகே—--உலகில்; அஸ்மின்—--இது; த்வி-விதா—--இரண்டு வகையான; நிஷ்டா—--நம்பிக்கை; புரா—--முன்பு; ப்ரோக்தா---விளக்கப்பட்டது; மயா—--என்னால் (ஸ்ரீ கிருஷ்ணர்); அனக—--பாவமற்ற; ஞான-யோகேன—--அறிவின் பாதையின் மூலம்; ஸாங்க்யானாம்—--சிந்தனையை நோக்கி ஈர்க்கப்பட்டவர்களுக்கு; கர்ம-யோகேன--—செயல் பாதையின் மூலம்; யோகினாம்--—யோகிகளின்
BG 3.3: பகவான் கூறினார்: ஓ பாவமற்றவனே, ஞானத்தை நோக்கி செல்லும் இரண்டு பாதைகள் முன்பு என்னால் விளக்கப்பட்டுள்ளன: சிந்தனையில் நாட்டங்கொண்ட அறிவின் பாதை மற்றும் செயலில் நாட்டங்கொண்ட செயலின் பாதை.
Start your day with a nugget of timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
வசனம் 2.39 இல், ஸ்ரீ கிருஷ்ணர் ஆன்மீக முழுமைக்கு வழிவகுக்கும் இரண்டு பாதைகளை விளக்கினார். முதலாவது, ஆன்மாவின் தன்மை மற்றும் உடலிலிருந்து அதன் வேறுபாட்டைப் பற்றிய பகுப்பாய்வு ஆய்வு மூலம் அறிவைப் பெறுதல். ஸ்ரீ கிருஷ்ணர் இதை ஸாங்கி2ய யோக3ம் என்று குறிப்பிடுகிறார். ஒரு தத்துவ மனப்பாங்கு கொண்டவர்கள் அறிவார்ந்த மற்றும் அறிவாற்றல் மூலம் சுயத்தை அறியும் இந்த பாதையில் நாட்டம் கொண்டுள்ளனர். இரண்டாவது, கடவுள் பக்தி அல்லது கர்ம யோகத்தில் செயல்படும் செயல்முறை. முந்தைய வசனத்தில் விளக்கப்பட்டுள்ளபடி ஸ்ரீ கிருஷ்ணர் இதை புத்3தி4 யோக3ம் என்றும் அழைக்கிறார். இவ்வாறாக, செயல்களை செய்வது மனதைத் தூய்மைப்படுத்துகிறது, மேலும். தூய்மையான மனதில் அறிவு இயல்பாகவே விழித்து, அதன் மூலம் அறிவொளிக்கு வழிவகுக்கும்.
ஆன்மிகப் பாதையில் ஆர்வமுள்ளவர்களில், சிந்தனையில் நாட்டம் உள்ளவர்கள் மற்றும், செயலில் நாட்டமுள்ளவர்களும் உள்ளனர். எனவே, இந்த இரண்டு பாதைகளும் கடவுள்-உணர்தலுக்கான ஆன்மாவின் அபிலாஷை தொடங்கின காலம் முதல் இருந்து வருகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் இரண்டு பாதைகளையும் குறிப்பிடுகிறார். ஏனெனில், அவருடைய அறிக்கை அனைத்து குணங்கள் மற்றும் விருப்பங்கள் கொண்டவர்களுக்கானது.