Bhagavad Gita: Chapter 3, Verse 36

அர்ஜுன உவாச1 |

அத2 கே1ன ப்1ரயுக்1தோ1‌யம் பா11ம் ச1ரதி1 பூ1ருஷ: |

அனிச்12ன்னபி1 வார்ஷ்ணேய ப3லாதி3வ நியோஜித1: ||36||

அர்ஜுனஹ உவாச—அர்ஜுனன் கூறினார்; அத—--பின்னர்; கேன--—எதன் மூலம்; ப்ரயுக்தஹ—--தூண்டப்பட்டு; அயம்—--ஒரு; பாபம்--—பாவத்தை; சரதி—--செய்கிறார்; புருஷஹ----ஒரு நபர்; அனிச்சன்—--விருப்பமில்லாமல்; அபி—--கூட; வார்ஷ்ணேய---—விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த, ஸ்ரீ கிருஷ்ணா; பலாத்—--பலத்தால்; இவ--—போன்று; நியோஜிதஹ--—ஈடுபடுத்துவது

Translation

BG 3.36: அர்ஜுனன் கேட்டார்: ஓ விருஷ்ணியின் (கிருஷ்ணன்) வம்சாவளியினரே, (கிருஷ்ணனரே) ஒருவன் ஏன் பாவச் செயல்களைச் செய்யத் தூண்டப்படுகிறான்?

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் முந்தைய வசனத்தில் ஒருவர் ஈர்ப்பு மற்றும் வெறுப்பின் தாக்கத்தில் வரக்கூடாது என்று கூறினார். அர்ஜுனன் அத்தகைய தெய்வீக வாழ்க்கையை வாழ விரும்புகிறார், ஆனால் அறிவுரையை செயல்படுத்துவது கடினம். எனவே அவர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மிகவும் யதார்த்தமான மற்றும் மனிதப் போராட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கேள்வியைக் கேட்கிறார். அவர் கூறுகிறார், ‘இந்த உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்கு எந்த சக்தி நம்மைத் தடுக்கிறது? பற்றுதலுக்கும் வெறுப்புக்கும் நம்மை இணங்க வைப்பது எது?'

பாவம் செய்யும் போது மனம் வருந்த வைக்கும் மனசாட்சி நம் அனைவருக்கும் உண்டு. கடவுள் அறத்தின் உறைவிடமாக இருக்கிறார் என்பதில் மனசாட்சி அடித்தளமாக உள்ளது, மேலும் நாம் அவரது சிறிய பகுதிகள் ஆகியதால், நாம் அனைவருக்கும் நல்லொழுக்கம் மற்றும் நன்மையின் மீது உள்ளார்ந்த ஈர்ப்பு உள்ளது. ஆன்மாவின் நற்குணத்தின் இயல்புமனசாட்சியின் குரலை எழுப்புகிறது. எனவே, திருடுவது, மோசடி செய்வது, அவதூறு செய்வது, மிரட்டி பணம் பறிப்பது, கொலை செய்வது, அடக்குமுறை செய்வது, ஊழல் செய்வது ஆகியவை நமக்குத் தெரியாது என்று சாக்குப்போக்கு சொல்ல முடியாது. இந்த செயல்கள் பாவம் என்று நாம் உள்ளுணர்வாக அறிந்திருக்கிறோம், ஆனால் சில வலுவான சக்திகள் அவற்றைச் செய்ய தூண்டுவது போல் நாம் அத்தகைய செயல்களைச் செய்கிறோம். அந்த வலிமையான சக்தி என்ன என்பதை அறிய அர்ஜுனன் விரும்புகிறார்.

Watch Swamiji Explain This Verse