Bhagavad Gita: Chapter 3, Verse 4

ந க1ர்மணாமனாரம்பா4ன்னைஷ்க1ர்ம்யம் பு1ருஷோ‌ஶ்னுதே1 |

ந ச1 ஸன்யஸனாதே3வ ஸித்3தி4ம் ஸமதி43ச்12தி1 ||4||

ந—--இல்லை; கர்மணாம்—--செயல்களை; அனாரம்பாத்—--தவிர்ப்பதன் மூலம்; நைஷ்கர்ம்யம்—--கர்ம வினைகளில் இருந்து விடுதலை; புருஷஹ---ஒரு நபர்; அஶ்ணுதே--—அடைகிற; ந—--இல்லை; ச--—மற்றும்; ஸன்யாஸனாத்--—துறப்பினால்; ஏவ--—மட்டும்; ஸித்திம்—--முழுமை; ஸமதிகச்சதி—--அடைகிற

Translation

BG 3.4: வெறும் வேலையில் இருந்து விலகி இருப்பதன் மூலம் கர்ம வினைகளிலிருந்து ஒருவர் விடுதலைபெற முடியாது, அல்லது வெறும் உடல் துறப்பினால் அறிவின் பரிபூரணத்தை அடைய முடியாது.

Commentary

இந்த வசனத்தின் முதல் வரி கர்ம யோகியைக் குறிக்கிறது (வேலையின் ஒழுக்கத்தை பின்பற்றுபவர்), இரண்டாவது வரி ஸாங்கி1ய யோகி3யைக் குறிக்கிறது (அறிவின் ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்).

முதல் வரியில், ஸ்ரீ கிருஷ்ணர், வெறும் வேலையைத் தவிர்ப்பதால் கர்ம வினைகளில் இருந்து விடுபட முடியாது என்று கூறுகிறார். மனம் பலனளிக்கும் எண்ணங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறது, மேலும் மன வேலையும் கர்மாவின் ஒரு வடிவம் என்பதால், உடல் உழைப்பைப் போலவே மன வேலையும் கர்ம வினைகளில் ஒருவரை பிணைக்கிறது. ஒரு உண்மையான கர்ம யோகி, செயல்களின் பலனில் எந்த பற்றுதலும் இல்லாமல் வேலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு புத்தியில் ஞானத்தை வளர்க்க வேண்டும். எனவே, கர்ம யோகத்தில் வெற்றி பெற தத்துவ அறிவும் அவசியம்.

இரண்டாவது வரியில், ஸாங்கி2ய யோகி 3 உலகைத் துறந்து துறவறம் ஆவதால் மட்டும் அறிவு நிலையை அடைய முடியாது என்று ஸ்ரீ கிருஷ்ணர் அறிவிக்கிறார். புலன்களின் இயற்பியல் பொருட்களை ஒருவர் கைவிடலாம், ஆனால் மனம் தூய்மையற்றதாக இருக்கும் வரை உண்மையான அறிவு விழிப்புணர்ச்சி நிகழாது. மனம் அதன் முந்தைய எண்ணங்களை திரும்பத் திரும்ப சிந்திக்கும் போக்கு கொண்டது. இவ்வாறு திரும்பத் திரும்ப சிந்திப்பது மனதிற்குள் ஒரு அலைவரிசையை உருவாக்குகிறது, மேலும், புதிய எண்ணங்கள் இவ்வாறு தவிர்க்கமுடியாமல் இதே திசையில் பாய்கின்றன. முந்தைய பழக்கத்திலிருந்து, பொருள் ரீதியாக மாசுபட்ட மனம் பொருள் உணர்வுகளின் மொத்த வரம்புக்குள் அடங்கிய கவலை, மன அழுத்தம், பயம், வெறுப்பு, பொறாமை, மற்றும் பற்றுதல் ஆகியவற்றின் திசையில் ஓடுகிறது. எனவே, அசுத்தமான உள்ளத்தில், வெறும் உடல் துறப்பினால், உணர்ந்த அறிவு தோன்றாது. அது மனதையும் புத்தியையும் தூய்மைப்படுத்தும் ஒருங்கிணைந்த செயலாக இருக்க வேண்டும். எனவே, ஸாங்கிய யோகத்திலும் வெற்றி பெறுவதற்கு செயல்களின் நடவடிக்கை அவசியம்.

தத்துவம் இல்லாத பக்தி உணர்வார்வக்கருத்து என்றும், பக்தி இல்லாத தத்துவம் அறிவுசார் ஊகம் என்றும் கூறப்படுகிறது. கர்ம யோகம் மற்றும் ஸாங்கிய யோகம் இரண்டிலும் செயலும் அறிவும் அவசியம். அவற்றின் விகிதாச்சாரம் மட்டுமே மாறுபடும், இதன் மூலம் இரண்டு பாதைகளுக்கு இடையே வேறுபாட்டை உருவாக்குகிறது.

Watch Swamiji Explain This Verse