Bhagavad Gita: Chapter 4, Verse 21

நிராஶீர்யத1சித்1தா1த்1மா த்1யக்11ஸர்வப1ரிக்3ரஹ: |

ஶாரீரம் கே1வலம் க1ர்ம கு1ர்வன்னாப்1னோதி1 கி1ல்பி3ஷம் ||21||

நிராஶீஹி----எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டு; யத---கட்டுப்படுத்தப்பட்ட; சித்த-ஆத்மா—--மனம் மற்றும் புத்தி; த்யக்த—--துறந்து; ஸர்வ--—அனைத்து; பரிக்ரஹஹ—--உரிமை உணர்வுகளை; ஶாரீரம்----உடல்; கேவலம்—--மட்டும்; கர்ம—--செயல்கள்; குர்வன்—--செய்து கொண்டு இருப்பவருக்கு; ந—-இல்லை ஆப்னோதி—--ஏற்டும்; கில்பிஷம்—--பாவம்; கில்பிஷம்--—பாவம்; ந—-ஆப்னோதி—ஏற்பபடாது

Translation

BG 4.21: எதிர்பார்ப்புகள் மற்றும் உரிமை உணர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, மனமும் புத்தியும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டால், அவர்கள் தங்கள் உடலால் செயல்பட்டாலும் அவர்களுக்கு எந்தப் பாவமும் ஏற்படாது.

Commentary

உலகச் சட்டத்தின்படி கூட, தற்செயலாக நடக்கும் வன்முறைச் செயல்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுவதில்லை. ஒருவர் சரியான பாதையில், சரியான வேகத்தில், கண்களை முன்னோக்கி வைத்துக்கொண்டு காரை ஓட்டிச் சென்றால், ஒருவர் திடீரென வந்து காரின் முன் விழுந்து இறந்தால், நீதிமன்றம் அதைக் குற்றமாக கருதாது. ஊனப்படுத்தவோ கொல்லவோ காரை ஓட்டிச் சென்ற அந்த நபருக்கு எந்த எண்ணமும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். மனதின் நோக்கமே முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது, செயல் அல்ல. அதேபோல், தெய்வீக உணர்வில் பணிபுரியும் மாயவாதிகள் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள், ஏனெனில் அவர்களின் மனம் பற்றுதல் மற்றும் சொத்துரிமையிலிருந்து விடுபடுகிறது, மேலும் அவர்களின் ஒவ்வொரு செயலும் கடவுளைப் பிரியப்படுத்தும் தெய்வீக நோக்கத்துடன் செய்யப்படுகிறது.

Watch Swamiji Explain This Verse