யத்1ஸாங்க்2யை: ப்1ராப்1யதே1 ஸ்தா2னம் த1த்3யோகை3ரபி13ம்யதே1 |

ஏக1ம் ஸாங்க்2யம் ச1 யோக3ம் ச1 ய: ப1ஶ்யதி1 ஸ ப1ஶ்யதி1 || 5 ||

யத்--—எது; ஸாங்க்யைஹி----கர்ம ஸன்யாஸத்தின் மூலம்; ப்ராப்யதே—--அடையப்படுவது; ஸ்தானம்—--இடம்; தத்--அது; யோகைஹி----பக்தியில் வேலை செய்வதன் மூலம்; அபி--—கூட; கம்யதே--—அடையப்படுகிறது; ஏகம்—ஒன்று;ஸாங்க்யம்—--செயல்களைத் துறப்பது; ச—--மற்றும்; யோகம்—--கர்ம யோகத்தையும்; ச--—மற்றும்; யஹ---—எவர்; பஶ்யதி--—பார்க்கிறார்; ஸஹ--—அந்த நபர்; பஶ்யதி——உண்மையில் பார்க்கிறார்

అనువాదం

BG 5.5: கர்ம ஸன்யாஸத்தால் அடையக்கூடியதை கர்ம யோகத்தின் மூலமும் அடையலாம் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். இவ்வாறு கர்ம ஸந்நியாஸத்தையும், கர்ம யோகத்தையும் ஒரே மாதிரியாகப் பார்ப்பவர்கள், உண்மையில் எல்லாவற்றையும் அப்படியே பார்க்கிறார்கள்.

వ్యాఖ్యానం

ஆன்மீக நடைமுறையில், மனதின் நோக்கமே முக்கியமானது, வெளிப்புற செயல்பாடுகள் அல்ல. ஒருவர் புனித பூமியான ப்ருந்தாவனத்தில் வசிக்கலாம், ஆனால் கொல்கத்தாவில் ரசகுல்லா சாப்பிடுவதைப் பற்றி மனம் யோசித்தால், ஒருவர் கொல்கத்தாவில் வசிப்பதாகக் கருதப்படுவார். மாறாக, ஒருவர் கொல்கத்தாவின் மையப்பகுதியில் வாழ்ந்து, ப்ருந்தாவனத்தின் தெய்வீக நிலத்தில் மனதை லயித்து வைத்திருந்தால், அவர் அங்கு வசிக்கும் பலனைப் பெறுவார். நம் மனதின் நிலையால் நமது உணர்வு நிலை தீர்மானிக்கப்படுகிறது என்று அனைத்து வேத நூல்களும் கூறுகின்றன:

மன ஏவ மனுஷ்யாணாம் கா1ரணம் ப3ந்4த மோக்ஷயோஹோ

(பஞ்ச13ஶி)

.’ ஜகத்குரு ஸ்ரீ கிருபாலுஜி மஹராஜ் இதே கொள்கையைக் கூறுகிறார்:

3ந்த4ன் ஔர் மோக்ஷ கா1, கா1ரண் மனஹி ப3கா2ந்

யாதே2 கௌ1னியு ப4க்1தி11ரு, க1ரு மன் தே1 ஹரித்4யான்

(ப4க்1தி1 ஶத1க்1 வசனம் 19)

‘பந்தமும் விடுதலையும் மன நிலையைப் பொறுத்தது. நீங்கள் எந்த வகையான பக்தியைத் தேர்ந்தெடுத்தாலும், மனதைக் கடவுளின் மீது தியானத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.’

இந்த ஆன்மீகக் கண்ணோட்டம் இல்லாதவர்கள் கர்ம ஸன்யாஸீக்கும் கர்ம யோகிக்கும் இடையிலான வெளிப்புற வேறுபாட்டைக் கண்டு, வெளிப்புறத் துறவின் காரணமாக கர்ம ஸன்யாஸீயை உயர்ந்தவர் என்று அறிவிக்கிறார்கள். ஆனால் கற்றறிந்தவர்கள் கர்ம ஸன்யாஸீ மற்றும் கர்மயோகி இருவரும் தங்கள் மனதைக் கடவுளில் ஈடுபடுத்தி உள்ளனர் என்பதையும், அவர்கள் இருவரும் தங்கள் உள் உணர்வில் ஒரே மாதிரியாக இருப்பதையும் காண்கிறார்கள்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
5. கர்ம ஸன்யாஸ யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency