Bhagavad Gita: Chapter 5, Verse 7

யோக3யுக்1தோ1 விஶுத்3தா4த்1மா விஜிதா1த்1மா ஜிதே1ன்த்3ரிய: |

ஸர்வபூ4தா1த்1மபூ4தா1த்1மா கு1ர்வன்னபி1 ந லிப்1யதே1 ||7||

யோக-யுக்தஹ—--கடவுளுடன் உணர்வில் ஐக்கியப்பட்டவர்; விஶுத்த-ஆத்மா—புனிதப்படுத்தப்பட்ட புத்தியைக் கொண்டவர்; விஜித-ஆத்மா----மனதை வென்றவர்; ஜித-இந்த்ரியஹ----புலன்களை வென்றவர்; ஸர்வ-பூத-ஆத்ம-பூத-ஆத்மா-—ஒவ்வொரு உயிரிலும் உள்ள அனைத்து ஆத்மாக்களின் ஆத்மாவையும் காண்பவர்; குர்வன்--—செய்து கொண்டிருந்த; அபி--—போதிலும்; ந—--ஒருபோதும் இல்லை; லிப்யதே----சிக்கிக் கொள்வார்

Translation

BG 5.7: புனிதப்படுத்தப்பட்ட புத்திசாலிகளான கர்மயோகிகள் மனதையும் புலன்களையும் கட்டுப் படுத்துகிறார்கள். ஒவ்வொரு உயிரினத்திலும் அனைத்து ஆத்மாக்களின் ஆத்மாவையும் காண்கிறார்கள். எல்லா வகையான செயல்களையும் செய்தாலும் அவர்கள் ஒரு போதும் சிக்குவதில்லை.

Commentary

ஆத்மா என்ற சொல் வேத இலக்கியங்களில் பல வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது: கடவுளுக்காக, ஆன்மாவிற்காக, மனதிற்காக மற்றும் புத்திக்காக. இந்த வசனம் இந்த அனைத்து பயன்பாடுகளையும் குறிக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் கடவுளுடன் உணர்வில் ஐக்கியமான (யோக யுக்த்) கர்ம யோகியை விவரிக்கிறார். அத்தகைய உன்னத ஆத்மா 1)விஶுத்தாத்மா (சுத்தமான புத்தி உடையவர்), 2) விஜிதாத்மா (மனதை வென்றவர்), மற்றும் 3) ஜிதேந்திரிய (புலன்களைக் கட்டுப்படுத்தியவர்) என்று அவர் கூறுகிறார்:

அத்தகைய கர்ம யோகிகள், புனிதப்படுத்தப்பட்ட புத்தியுடன், எல்லா உயிரினங்களிலும் அமைந்துள்ள கடவுளைக் கண்டு, பற்று இல்லாமல் அனைவரிடமும் மரியாதையுடன் நடந்துகொள்கிறார்கள். அவர்களின் செயல்கள் சுய இன்பத்திற்கான விருப்பத்தால் தூண்டப்படுவதில்லை என்பதால், அவர்களின் அறிவு படிப்படியாக தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்களின் ஆசைகள் நீங்கியதால், புலன் இன்பங்களுக்காக உந்தப்பட்ட புலன்கள், மனம் மற்றும் புத்தி ஆகியவை கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன. இந்த கருவிகள் இப்போது இறைவனின் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. பக்தி சேவையானது உள்ளிருந்து உணரும் அறிவிற்கு வழிவகுக்கிறது. இந்த வழியில், கர்ம யோகம் இயற்கையாகவே இந்த தொடர்ச்சியான அறிவொளி நிலைகளைக் கொண்டுவருகிறது. எனவே, கர்ம ஸன்யாஸிலிருந்து வேறுபட்டது அல்ல.

Watch Swamiji Explain This Verse