Bhagavad Gita: Chapter 7, Verse 26

வேதா3ஹம் ஸமதீ1தா1னி வர்த1மானானி சா1ர்ஜுன |

4விஷ்யாணி ச1 பூ4தானி மாம் து1 வேத3 ந க1ஶ்ச1ன ||
26 ||

வேத-—-அறிக; அஹம்--—நான்; ஸமதீதானி--—கடந்த காலம்; வர்தமானானி----நிகழ்காலம்; ச—--மற்றும்; அர்ஜுனா--—அர்ஜுனன்; பவிஷ்யாணி—--எதிர்காலம்; ச--—மேலும்; பூதானி—--எல்லா உயிர்களும்; மாம்—-நான்; து--—ஆனால்; வேத—--அறிகிறது; ந கஶ்சன----யாரும் இல்லை

Translation

BG 7.26: ஓ அர்ஜுனா, எனக்கு கடந்த காலம், நிகழ்காலம். மற்றும் எதிர்காலம் தெரியும், மேலும் அனைத்து உயிரினங்களையும் நான் அறிவேன், ஆனால் என்னை யாரும் அறியார்.

Commentary

கடவுள் எல்லாம் அறிந்தவர். இங்கே அவர்கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தை அறிந்த த்1ரிகாலத3ர்ஷியாக தன்னை அறிவித்துக் கொள்கிறார். சில மணிநேரங்களுக்கு முன்பு நாம் நினைத்ததை மறந்து விடுகிறோம். ஆனால் ப்ரபஞ்சத்தில் உள்ள எல்லையற்ற ஆன்மாக்கள் ஒவ்வொன்றின் எண்ணங்களையும், வார்த்தைகளையும், செயல்களையும், அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு எல்லையற்ற வாழ்நாளிலும் கடவுள் நினைவுகூருகிறார். இவை ஒவ்வொரு ஆன்மாவிற்கும் (முடிவற்ற வாழ்நாளின் செயல்களின் இருப்ப (ஸஞ்சித் கர்மா) ஆகும். கடவுள் கர்மாவின் சட்டத்தின் வடிவத்தில் நீதியை வழங்குவதற்காக இது பற்றிய கணக்குகளை பராமரிக்க வேண்டும். இதன் விளைவாக, அவர் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அறிந்திருப்பதாககூறுகிறார். முண்ட3கோ11நிஷத3ம். கூறுகிறது:

யஹ ஸர்வஞ்ஞஹ ஸர்வவித்3யஸ்ய ஞானமயம் த11ஹ (1.1.9)

‘கடவுள் அனைத்தையும் அறிந்த ஸர்வ ஞானம் பெற்றவர். அவருடைய துறவரம் அறிவைக் கொண்டது.’

இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும், யாரும் அவரை அறியவில்லை என்று கூறுகிறார். கடவுள் தேசோமயானந்த மகிமை, ஆற்றல்கள், குணங்கள், எல்லாவற்றிலும் எல்லையற்றவர். எல்லைக்கு உட்பட்ட நமது புத்தியினால் ஸர்வ வல்லமை உள்ள கடவுளை புரிந்து கொள்ள முடிவதில்லை. அனைத்து வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன:

நைஷா த1ர்கே1ண மதி1ராப1னேயா (க1டோ21நிஷத3ம் 1.2.9)

‘கடவுள் நமது அறிவுசார் தர்க்கத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்.’

யதோ1 வாசோ1 நிவர்த1ந்தே1 அப்1ராப்1ய மனஸா ஸஹ

(தை1த்1தி1ரீய உப1நிஷத3ம் 2.9.1)

‘கடவுளை வார்த்தைகளால் விவரிக்கவோ அல்லது நமது மனதால் அவரைப் புரிந்து கொள்ளவோ முடியாது.’

ராம அத1ர்க்1ய பு3த்3தி4 மன பா3னீ, மத1 ஹமாரா அஸ ஸுனஹி ஸயாநீ.

(ராமாயணம்)

'கடவுளை வாதங்களால் பகுப்பாய்வு செய்யவோ அல்லது வார்த்தைகள், மனம், அறிவு ஆகியவற்றால் வடிவமைக்கவோ முடியாது.'

கடவுளை அறிந்த ஒரே ஒரு ஆளுமை கடவுள் மட்டுமே. அவர் ஏதேனும் ஒரு ஆத்மாவின் மீது தனது கருணையை வழங்க முடிவு செய்தால், அவர் தனது புத்தியை அந்த அதிர்ஷ்டமான ஆத்மாவுக்கு வழங்குகிறார். கடவுளின் சக்தியுடன், அந்த அதிர்ஷ்டமான ஆத்மா கடவுளை அறிய முடியும். இதன் விளைவாக, கடவுளை அறிந்து கொள்வதில் கருணையின் கருத்து மிக முக்கியமானது. இந்த கருத்து பின்னர் 10.11 மற்றும் 18.56 வசனங்களில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.