Bhagavad Gita: Chapter 9, Verse 10

மயாத்4யக்ஷேண ப்1ரக்1ருதி1: ஸூயதே ஸச1ராச1ரம் |

ஹேது1னானேன கௌ1ன்தே1ய ஜக3த்1விப1ரிவர்த1தே1 ||10||

மயா——என்னால்; அத்யக்ஷேண——வழிகாட்டுதலின் கீழ்; ப்ரகிருதிஹி——பொருள் ஆற்றல்; ஸுயதே—— உருவாக்குகிறது; ஸ——இரண்டையும்; சர—அசரம்——உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளை; ஹேதுனா——காரணத்தினால்; அனேன——இந்த; கௌந்தேய——குந்தியின் மகன் அர்ஜுனா; ஜகத்——பொருள் உலகம்; விபரிவர்த்தே——மாற்றங்களுக்கு உட்படுகிறது

Translation

BG 9.10: குந்தியின் மகனே, எனது வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதால், இந்த பொருள் ஆற்றல் அனைத்து உயிருள்ள மற்றும் உயிரற்ற வடிவங்களை உருவாக்குகிறது. இந்த காரணத்திற்காக, பொருள் உலகம் மாற்றங்களுக்கு உட்படுகிறது (உருவாக்கம், பராமரிப்பு மற்றும் கலைத்தல்).

Commentary

கடைசி வசனத்தில் விளக்கப்பட்டுள்ளபடி, உயிர்களை உருவாக்கும் பணியில் கடவுள் நேரடியாக ஈடுபடவில்லை. இந்த நோக்கத்திற்காக அவரால் நியமிக்கப்பட்ட அவரது பல்வேறு ஆற்றல்கள் மற்றும் ஆன்மாக்கள் அவரது ஆதிக்கத்தின் கீழ் அதைச் செய்கின்றன. உதாரணமாக, ஒரு நாட்டின் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் அரசங்கத்தின் ஒவ்வொரு பணியையும் செய்வதில்லை. அவருக்கு கீழ் பல்வேறு துறைகள் உள்ளன, மேலும் மேற்பார்வையிடும் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் உள்ளனர். இருப்பினும், அரசங்கத்தின் சாதனைகள் மற்றும் தோல்விகளுக்கு அவர் காரணமாக காட்டப்படுகிறார். ஏனென்றால், அவர் தனது அதிகார வரம்பிற்கு உட்பட்ட பணிகளைச் செய்யும் அரசாங்க அதிகாரிகளை அங்கீகரிக்கிறார். அவ்வாறே, முதன்முதலில் பிறந்த ப்ரஹ்மாவும், ஜட சக்தியும் உயிர் வடிவங்களை உருவாக்குதல் மற்றும் வெளிப்படுத்துதல் ஆகிய பணிகளைச் செய்கின்றனர். அவர்கள் கடவுளின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவதால், அவர் படைப்பாளர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.