இந்த்3ரியாணாம் ஹி ச1ரதா1ம் யன்மனோனுவிதீ4யதே1 |
த1த3ஸ்ய ஹரதி1 ப்1ரஞ்ஞாம் வாயுர்நாவமிவாம்ப4ஸி ||67||
இந்த்ரியாணாம்—--புலன்களின்; ஹி—--நிச்சயமாக; சரதாம்—--இங்கும் அங்கும் அலையும்; யத்--—எது; மனஹ--— மனம்; அனுவிதீயதே---தொடர்ந்து சிந்திப்பது; தத்—--அதுவே; அஸ்ய—--அதனுடைய; ஹரதி--- வழிதவறச் செய்துவிடும்; ப்ரஞ்ஞாம்—--புத்தியை; வாயுஹு--—காற்று; நாவம்—--படகை; இவ-— போல்; அம்பஸி----தண்ணீரில்
BG 2.67: பலத்த காற்று படகை அதன் பட்டயப் பாதையில் இருந்து தண்ணீரில் அடித்துச் செல்வது போல, மனம் ஒருமுகப்படுத்தும் புலன்களில் ஏதாவது ஒரு புலனை பற்றி தொடர்ந்து சிந்திப்பது கூட புத்தியை வழிதவறச் செய்துவிடும். க1டோ2ப1நிஷத3ம் கூறுகிறது,
கடவுள் நமது ஐந்து புலன்களை வெளிப்புறமாக பார்க்க வைத்துள்ளார். ப1ராஞ்சி1 கா2னி வ்யத்1ரிணத்1ஸ்வயம்பூ4ஹு (2.1.1) எனவே, அவை தானாக வெளி உலகில் உள்ள தங்கள் பொருட்களை நோக்கி இழுக்கப்படுகின்றன, மேலும், மனதை ஒருமுகப்படுத்தும் புலன்களில் ஏதேனும் ஒரு புலனுக்கு கூட அதைத் தவறாக வழிநடத்தும் சக்தி உள்ளது.
கு1ரங்க3 மாத1ங்க3 ப3தங்க3 ப்ரி3ங்க3
மீனாஹதா1ஹா ப1ஞ்சபி4ரேவ ப1ஞ்ச1
ஏக1ஹ ப்1ரமாதீ3 ஸ க1த2ம் ந ஹன்யதே11
யஹ ஸேவதே1 ப1ஞ்சபி4ரேவ ப1ஞ்ச1 (ஸுக்1தி1 ஸுதா4க1ர்)
'மான்கள் இனிமையான ஒலிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. மெல்லிசை இசையைத் தொடங்கி அவைகளைக் கவர்ந்த வேடன் பின்னர் அவைகளைக் கொன்றுவிடுகிறான். தேனீக்கள் வாசனையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அவைகள் அதன் தேனை உறிஞ்சும் போது, பூ இரவில் மூடுகிறது, மேலும் அவைகள் அதில் சிக்கிக் கொள்கின்றன. மீன்கள் உண்ணும் ஆசையில் தூண்டில் இரையின் ஆசையில், மீனவர்களின் தூண்டிலில் சிக்கிக் கொள்கின்றன. பூச்சிகள் வெளிச்சத்திற்கு இழுக்கப்படுகின்றன. அவைகள் நெருப்புக்கு மிக அருகில் வந்து எரிந்து விடுகிறார்கள். யானைகளின் பலவீனம் தொடு உணர்வு. ஆண் யானையை குழிக்குள் இழுக்க பெண் யானையை தூண்டில் கோலாக வேட்டைக்காரன் பயன்படுத்துகிறான். இந்த உயிரினங்கள் அனைத்தும் தங்கள் புலன்களில் ஒன்றின் மூலம் தங்கள் மரணத்தை நோக்கி இழுக்கப்படுகின்றன. ஐந்து புலன்களின் பொருட்களையும் அனுபவிக்கும் ஒரு மனிதனின் கதி என்னவாகும்?’ இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனிடம் மனதை வழிதவறச் செய்யும் இந்த புலன்களின் சக்தியைப் பற்றி எச்சரிக்கிறார்.
இந்த்3ரியாணாம் ஹி ச1ரதா1ம் யன்மனோனுவிதீ4யதே1 |
த1த3ஸ்ய ஹரதி1 ப்1ரஞ்ஞாம் வாயுர்நாவமிவாம்ப4ஸி ||67||
பலத்த காற்று படகை அதன் பட்டயப் பாதையில் இருந்து தண்ணீரில் அடித்துச் செல்வது போல, மனம் ஒருமுகப்படுத்தும் புலன்களில் ஏதாவது ஒரு புலனை பற்றி தொடர்ந்து சிந்திப்பது …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily