மோகா4ஶா மோக4க1ர்மாணோ மோக4ஞானா விசே1த1ஸ: |
ராக்ஷஸீமாஸுரீம் சை1வ ப்1ரக்1ருதி1ம் மோஹினீம் ஶ்ரிதா1: ||12||
மோக—ஆஶாஹா——வீண் எதிர்பார்ப்புகளுடனும்; மோக——கர்மாணஹ வீண் செயல்களுக்கு உட்பட்டும்; மோக—ஞானாஹா——குழப்பமான அறிவுடையவரும்; விசேதஸஹ--—மாயைக்குட்பட்டவர்கள்; ராக்ஷஸீம்——பேய்த்தனத்தையும்; ஆஸுரிம்——நாத்திகத்தையும்; ச——மற்றும்; ஏவ——நிச்சயமாக; ப்ரகிரிதிம்——பொருள் ஆற்றலில்; மோஹினீம்——திகைத்து; ஶ்ரிதாஹா---ஏற்றுக்கொள்கிறார்கள்
BG 9.12: பொருள் ஆற்றலால் மாயைக்குட்பட்டவர்கள் திகைத்து, பேய் மற்றும் நாத்திக கருத்துக்களை கடைப்பிடிக்கிறார்கள். அந்த ஏமாற்றப்பட்ட நிலையில், அவர்களின் நலனுக்கான நம்பிக்கைகள் வீணாகின்றன, அவர்களின் பலனளிக்கும் செயல்கள் வீணாகின்றன, மேலும் அவர்களின் அறிவு கலாச்சாரம் குழப்பமடைகிறது.
கடவுளின் தனிப்பட்ட வடிவம் தொடர்பான பல நாத்திகக் கருத்துக்கள் உலகில் பரவலாக உள்ளன. கடவுள் ஒரு தனிப்பட்ட வடிவத்தில் உலகில் இறங்க முடியாது என்று சிலர் அறிவிக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள்; அவர் ஒரு யோகி மட்டுமே. ஸ்ரீ கிருஷ்ணர் மாயா-விஶிஷ்ட1 ப்3ரஹ்ம, அதாவது, பொருள் ஆற்றலுடன் தொடர்பு கொள்வதன் காரணமாக உயர்ந்த தெய்வீகத்தின் கீழ் தரமானவர் என்று மற்றவர்கள் கூறுகிறார்கள். இன்னும் சிலர் ஸ்ரீ கிருஷ்ணர் பிருந்தாவனத்தின் பசு மேய்க்கும் பெண்களுடன் சுற்றித் திரிந்த ஒரு குணமில்லாத ஊர்சுற்றி என்று கூறுகிறார்கள்.
இந்த வசனத்தின்படி, இந்த கோட்பாடுகள் அனைத்தும் தவறானவை, அவற்றைக் கடைப்பிடிப்பவர்களின் புத்தி பொருள் ஆற்றலால் ஏமாற்றப்படுகிறது. இப்படிப்பட்ட தெய்வீகமற்ற தத்துவங்களை ஏற்றுக்கொள்பவர்கள் அசுர குணம் கொண்டவர்கள் என்று ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் அளவிற்கு செல்கிறர். அவர்கள் பரமாத்மாவின் தனிப்பட்ட வடிவத்தின் மீது தெய்வீக உணர்வுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதால், அவர் மீது பக்தியில் ஈடுபட முடியாது. கடவுளின் உருவமற்ற அம்சத்தின் மீதான பக்தி மிகவும் கடினமானது என்பதால், அவர்களால் அதையும் செய்ய முடியாது. இதன் விளைவாக, அவர்கள் நித்திய நல்வாழ்வுக்கான பாதையை இழக்கிறார்கள். பொருள் ஆற்றலின் நிலையற்ற ஈர்ப்புகளால் குழப்பமடைந்து, நித்திய நல்வாழ்வுக்கான அவர்களின் நம்பிக்கைகள் பயனற்றவை ஆகிறது
மோகா4ஶா மோக4க1ர்மாணோ மோக4ஞானா விசே1த1ஸ: |
ராக்ஷஸீமாஸுரீம் சை1வ ப்1ரக்1ருதி1ம் மோஹினீம் ஶ்ரிதா1: ||12||
பொருள் ஆற்றலால் மாயைக்குட்பட்டவர்கள் திகைத்து, பேய் மற்றும் நாத்திக கருத்துக்களை கடைப்பிடிக்கிறார்கள். அந்த ஏமாற்றப்பட்ட நிலையில், அவர்களின் நலனுக்கான நம்பிக்கைகள் வீணாகின்றன, அவர்களின் பலனளிக்கும் செயல்கள் வீணாகின்றன, …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily