ந ச1 மாம் தா1னி க1ர்மாணி நிப3த்4னன்தி1 த4னந்ஜய |
உதா3ஸீனவதா3ஸீனமஸக்1த1ம் தே1ஷு க1ர்மஸு ||9||
ந——இல்லை; ச——மற்றும்; மாம்——என்னை; தானி——அவை; கர்மாணி——செயல்கள்; நிபத்நந்தி—— பிணைக்கிறது; தனஞ்சய--—அர்ஜுனன், செல்வத்தை வென்றவனே; உதாஸீன—வத்——நடுநிலையாக; ஆஸீனம்——அமைந்து; அஸக்தம்——செயல்களில் இருந்து விலகி; தேஷு——அவைகளிலிருந்து; கர்மஸு--—செயல்களிலிருந்து
BG 9.9: செல்வத்தை வென்றவரே, இந்த செயல்கள் எதுவும் என்னை பிணைப்பதில்லை. நான் இந்தச் செயல்களில் இருந்து விலகி, நடுநிலையான பார்வையாளனாகவே இருக்கிறேன்.
பொருள் ஆற்றல் உண்மையில் செயலற்றது மற்றும் உணர்ச்சியற்றது. அது உயிர்க்கு ஆதாரமான உணர்வு அற்றது. அப்படியென்றால், இப்படி ஒரு அற்புதமான உலகத்தை உருவாக்கும் அற்புதமான வேலையை அது எவ்வாறு செய்கிறது என்று ஒருவர் ஆச்சரியப்படலாம்? ராமாயணம் இதை நன்றாக விளக்குகிறது:
ஜாஸு ஸத்1யதா1 தே1 ஜட3 மாயா, பா4ஸ ஸத்1ய இவ மோஹ ஸஹாயா
'பொருள் ஆற்றல் தன்னளவில் உணர்ச்சியற்றது. ஆனால் அது கடவுளிடமிருந்து உத்வேகத்தைப் பெரும்பொழுது, அது உணர்வுபூர்வமாக செயல்படத் தொடங்குகிறது.’ இது சமையலறையில் ஒரு ஜோடி இடுக்கியை போன்றது. அது உயிரற்றதாயினும். ஒரு சமையல்காரரின் கைகளில், அது உயிர்ப்பித்து, சூடான கிண்ணங்களை உயர்த்துவது போன்ற அற்புதமான விஷயங்களைச் செய்கின்றது. அவ்வாறே, பொருள் சக்திக்கு எதையும் செய்யும் சக்தி இல்லை. கடவுள் உலகைப் படைக்க விரும்பும்பொழுது, அவர் பொருள் ஆற்றலைப் பார்த்து, அதை உயிரூட்டுகிறார்.
அவரது விருப்பத்தாலும் உத்வேகத்தாலும் படைப்பின் செயல்முறை நடந்தாலும், அவர் பொருள் ஆற்றலின் வேலையால் பாதிக்கப்படாமல் இருக்கிறார் என்பது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய கருத்தாகும். அவருடைய ஹ்லாதி3னி சக்தியின் (ஆனந்த சக்தி) காரணமாக அவர் எப்பொழுதும் ஆனந்தமாகவும், அவரது ஆளுமையில் இடையூறு ஏற்படாமலும் இருக்கிறார். எனவே, வேதங்கள் அவரை ஆத்1மாராம் என்று அழைக்கின்றன, அதாவது, 'வெளி இன்பங்கள் எதுவும் தேவையில்லாமல், தன்னில் மகிழ்ந்தவர்.' அவர் பாதிக்கப்படாதவர் என்பதை விளக்கி, கடவுள் இப்பொழுது அவர் செய்யாதவர் மற்றும் மேற்பார்வையாளர் என்று விளக்குகிறார்.
ந ச1 மாம் தா1னி க1ர்மாணி நிப3த்4னன்தி1 த4னந்ஜய |
உதா3ஸீனவதா3ஸீனமஸக்1த1ம் தே1ஷு க1ர்மஸு ||9||
செல்வத்தை வென்றவரே, இந்த செயல்கள் எதுவும் என்னை பிணைப்பதில்லை. நான் இந்தச் செயல்களில் இருந்து விலகி, நடுநிலையான பார்வையாளனாகவே இருக்கிறேன்.
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!
Welcome 🙏
Here's what you've unlocked
Bookmarks
Save verses for quick return
Notes
Write your own reflections
Progress
Track all 18 chapters
Verse of the Day
A new shloka in your inbox daily