Bhagavad Gita: Chapter 7, Verse 1

ஶ்ரீப43வானுவாச1 |

மய்யாஸக்11மனா: பா1ர்த2 யோக3ம் யுஞ்ஜன்மதா3ஶ்ரய: |

அஸந்ஶயம் ஸமக்3ரம் மாம் யதா2 ஞாஸ்யஸி த1ச்1ச்2ருணு || 1 ||

ஶ்ரீ-பகவான் உவாச--—ஒப்புயர்வற்ற பகவான் கூறினார்; மயி—--என்னிடம்; ஆஸக்த-மனாஹா--—இணைந்த மனதுடன்; பார்த—--ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; யோகம்--—பக்தி யோகம்; யுஞ்ஜன்--—பயின்றவாறு; மத்-ஆஶ்ரயஹ--—என்னிடம் சரணடைந்து; அஸந்ஶயம்---—சந்தேகத்திலிருந்து விடுபட்டு; ஸமக்ரம்—--முற்றிலும்; மாம்--—என்னை; யதா--—எப்படி; ஞாஸ்யஸி--—நீ அறிந்துகொள்; தத்--—அது; ஸ்ருணு--—கேள்

Translation

BG 7.1: மனதை என்னிடமே பிரத்தியேகமாக லயித்து பக்தி யோகத்தால் என்னிடம் சரண் அடைவதன் மூலம் சந்தேகமின்றி, என்னை முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

Commentary

ஆறாவது அத்தியாயத்தின் முடிவில், ஸ்ரீ கிருஷ்ணர், தன்னைப் பிரத்தியேகமாக மனதில் தியானித்து பக்தியுடன் சேவை செய்பவர்கள் எல்லா யோகிகளிலும் சிறந்தவர்கள் என்று அறிவித்தார். இந்த கூற்று இயல்பான கேள்விகளுக்கு வழிவகுக்கும்: ஒப்புயர்வற்ற இறைவனை அறிய என்ன வழி? அவரை எப்படி தியானிக்க வேண்டும்? ஒரு பக்தன் கடவுளை எப்படி வழிபட வேண்டும்? அர்ஜுனன் இந்தக் கேள்விகளை எழுப்பாவிட்டாலும், இரக்கத்தால், இறைவன் அவற்றை முன்வைத்து, அவற்றுக்கு பதிலளிக்கத் தொடங்குகிறார். 'கேள்' என்று பொருள்படும் ஸ்ருணு என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, 'உங்கள் மனதை ஒருமுகப்படுத்துங்கள்' என்று பொருள்படும் மதா3ஸ்ரயஹ என்ற சொல்லைக் கொண்டு தகுதிப்படுத்துகிறார்.