Bhagavad Gita: Chapter 7, Verse 28

யேஷாம் த்1வன்த131ம் பா11ம் ஜனானாம் பு1ண்யக1ர்மணாம் |

தே1 த்3வன்த்3வமோஹனிர்முக்1தா14ஜன்தே1 மாம் த்3ருட4வ்ரதா1: ||28||

யேஷாம்—--யாருடைய; து-—-ஆனால்; அந்த-கதம்—--முற்றிலும் அழிந்து; பாபம்—--பாவங்கள்; ஜனானாம்--—நபர்களின்; புண்ய—--பக்தியுள்ள; கர்மா--ணம்—--செயல்பாடுகள்; தே—அவர்கள்; த்வந்த்வ—இருமைகளின்; மோஹ—---மாயை; நிர்முக்தாஹா--—இதிலிருந்து விடுபட்டது; பஜந்தே—--வழிபாடு; மாம்---என்னை; த்ருடவ்ரதாஹா--—உறுதியுடன்

Translation

BG 7.28: ஆனால் புண்ணிய செயல்களில் ஈடுபட்டு பாவங்கள் அழிக்கப்பட்ட நபர்கள், இருமைகளின் மாயையிலிருந்து விடுபடுகிறார்கள். அத்தகைய நபர்கள் என்னை உறுதியுடன் வணங்குகிறார்கள்.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் 2.69 வசனத்தில் அறியாமையால் சூழபட்டவர்கள் இரவாக கருதுவதை ஞானிகள் பகலாக கருதுகின்றனர் என்று கூறினார். கடவுளை உணர்ந்து கொள்வதற்கான நாட்டத்தால் எழுப்பப்பட்டவர்கள், வலியை தன்னைத் துறப்பதற்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் உதவும் ஒரு வாய்ப்பாக வரவேற்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆன்மாவை மறைக்கக்கூடிய இன்பத்தைப் பற்றியும் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இன்பத்திற்காக ஏக்கமும், வலியின் மீது வெறுப்பும் இருப்பதில்லை. இந்த ஆசை, வெறுப்பு ஆகிய இருமைகளிலிருந்து மனதை விடுவித்த அத்தகைய ஆத்மாக்கள் அசைக்க முடியாத உறுதியுடன் கடவுளை வணங்க முடியும்.