Bhagavad Gita: Chapter 6, Verse 34

1ஞ்ச1லம் ஹி மன: க்1ருஷ்ண ப்1ரமாதி2 3லவத்3த்3ருடம் |

1ஸ்யாஹம் நிக்3ரஹம் மன்யே வாயோரிவ ஸுது3ஷ்க1ரம் ||34||

சஞ்சலம்—--அமைதியற்ற; ஹி—--நிச்சயமாக; மனஹ—--மனம்; கிருஷ்ணா—--ஸ்ரீ கிருஷ்ணா; ப்ரமாதி—--கொந்தளிப்பு; பல-வத்—வலுவான; த்ருடம்—--பிடிவாதமான; தஸ்ய—--அதன்; அஹம்—--நான்; நிக்ரஹம்—--கட்டுப்பாடு; மன்யே—--நினைப்பது; வாயோஹோ—--காற்றின்; இவ—--போன்ற; ஸு-துஷ்கரம்----செயல்படுத்துவது கடினம்

Translation

BG 6.34: மிகவும் அமைதியற்ற , கொந்தளிக்கும், வலிமையான, பிடிவாதமான மனதை கட்டுப்படுத்துவது, ஓ கிருஷ்ணா, காற்றைக் கட்டுப்படுத்துவதை காட்டிலும் மிகவும் கடினமானது என்று எனக்குத் தோன்றுகிறது.

Commentary

தொல்லை தரும் மனதை விவரிக்கும் போது அர்ஜுனன் நாம் எல்லோருக்கும் ஆக பேசுகிறார். ஒரு விஷயத்தில் இருந்து மற்றொரு விஷயத்துக்கு வெவ்வேறு திசைகளில் பறக்கும் மனம் அமைதியற்றது, வெறுப்பு, கோபம், காமம், பேராசை, பொறாமை, பதட்டம், பயம், பற்றுதல் மற்றும் பிற எதிர்மறைகளின் தொகுப்பில் ஒருவரின் நனவில் எழுச்சிகளை உருவாக்குவதால் இது கொந்தளிப்பானது. அது புத்தியை அதன் வீரியமான நீரோட்டங்களால் முறியடிக்கும் திறனை கொண்டுள்ளதால் இது வலிமையானது, மற்றும் பாகுபாட்டின் திறனை அழிக்கிறது. புத்தியை கூட கலக்கும் ஆற்றல் கொண்ட மனம் ஒரு தீங்கு விளைவிக்கும் எண்ணத்தை பிடிக்கும்போது அதை விட மறுக்கிறது. மறுத்து மீண்டும் மீண்டும் அதை துரத்துகிறது. இவ்வாறு அதன் ஆரோக்கியமற்ற பண்புகளை எண்ணி அர்ஜுனன் மனம் மிகவும் கடினமானது என்று அறிவிக்கிறார். மனம் காற்றை விட கட்டுப்படுத்துவதற்கு கடினமானது என்று அர்ஜுனன் கூறுவது ஒரு சக்திவாய்ந்த ஒப்புவமை ஆகும். .ஏனெனில், வானத்தில் வீசும் பலத்த காற்றைக் கட்டுப்படுத்துவது பற்றி யாரும் நினைக்க முடியாது.

இந்த வசனத்தில் அர்ஜுனன் இறைவனை கிருஷ்ணன் என்று அழைக்கிறார். 'கிருஷ்ணா' என்ற வார்த்தையின் அர்த்தம்: க1ர்ஷதி1 யோகி3னாம் ப1ரமஹம்ஸானாம் சே1தான்ஸி இதி 1 கி 1ருஷ்ணஹ 'மிகவும் சக்தி வாய்ந்த யோகி மற்றும் பரமஹம்ஸர்களின் மனதைக் கூட வலுக்கட்டாயமாக கவர்ந்திழுப்பவர் கிருஷ்ணர்.’ இந்தக் குறிப்புடன், தனது அமைதியற்ற, கொந்தளிப்பான, வலிமையான மற்றும் பிடிவாதமான மனதையும் கிருஷ்ணர் ஈர்க்க வேண்டும் என்று அர்ஜுன் சுட்டிக்காட்டுகிறார்.