Bhagavad Gita: Chapter 10, Verse 41

யத்3யத்3விபூ4தி1மத்1ஸத்1த்1வம் ஶ்ரீமதூ3ர்ஜிதமேவ வா |

1த்11தே3வாவக3ச்12 த்1வம் மம தே1ஜோம்‌ஶஸம்ப4வம் ||41||

யத் யத்—--எதுவாக இருந்தாலும்; விபூதிமத்--—வளமான; ஸத்வம்--—இருப்பது; ஸ்ரீ-மத்—--அழகான; ஊர்ஜிதம்—--புகழ் வாய்ந்தத; ஏவ—--மேலும்; வா—--அல்லது; தத் தத்—--அனைத்தும்; ஏவ--—மட்டும்; அவகச்ச—--அறிவாய்; த்வம்—--நீ; மம—--என்; தேஜஹ—--புத்திசாலித்தனத்தின் தீப்பொறி; அன்ஶ—--ஒரு பகுதியில்; ஸம்பவம்—--பிறந்ததாக

Translation

BG 10.41: அழகு, செழுமை, புத்திசாலித்தனம் என நீ எதைப் பார்த்தாலும், அது என்னிடமிருந்து பிறந்ததாகக் கருதுவாய், மற்றும் என் புத்திசாலித்தனத்தின் தீப்பொறி என்று அறிவாய்.

Commentary

ஒலிபெருக்கி வழியாக பாயும் மின்சாரம் ஒலியை உருவாக்குகிறது, ஆனால் அது எவ்வாறு இயங்குகிறது என்பதை அறியாத ஒருவர் ஒலிபெருக்கியில் இருந்து ஒலி வருகிறது என்று நினைக்கலாம். அவ்வாறே, நம் கற்பனையை மகிழ்வித்து, நம்மை மகிழ்ச்சியில் மூழ்கடிக்கும் பொழுது அது கடவுளின் மகிமையின் தீப்பொறி என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவர் அழகு, மகிமை, சக்தி, அறிவு மற்றும் செழுமை ஆகியவற்றின் எல்லையற்ற கிடங்கு. எல்லா உயிர்களும் பொருட்களும் அவற்றின் சிறப்பைப் பெறுகின்ற ஆற்றல் மிக்கவர் அவர். எனவே, எல்லா மகிமைக்கும் ஆதாரமான கடவுளை நாம் வழிபாட்டின் பொருளாக மாற்ற வேண்டும்.