Bhagavad Gita: Chapter 10, Verse 28

ஆயுதா4னாமஹம் வஜ்ரம் தே4னூனாமஸ்மி கா1மது4க்1 |

ப்1ரஜ3னஶ்சா1ஸ்மி க1ன்த3ர்ப1: ஸர்பா1ணாமஸ்மி வாஸுகி1: ||28||

ஆயுதானாம்—--ஆயுதங்களில்; அஹம்--—நான்; வஜ்ரம்—--இடி; தேனூனாம்--—பசுக்களில்; அஸ்மி--—நான்; காம-துக்—-காமதேனு; ப்ரஜனஹ-----இனப்பெருக்கத்திற்கான காரணங்களில்; ச--—மற்றும்; அஸ்மி--—நான்; கந்தர்பஹ--—காமதேவன், அன்பின் கடவுள்; ஸர்பாணாம்—--பாம்புகளுக்கு மத்தியில்; அஸ்மி—---நான்;— வாஸுகிஹி-----வாஸுகி பாம்பு

Translation

BG 10.28: நான் ஆயுதங்களில் வஜ்ரா (இடி) மற்றும் பசுக்களில் காமதேனு. நான், இனப்பெருக்கத்திற்கான காரணங்களுக்கு இடையேயான அன்பின் கடவுள் காமதேவன்; மற்றும் பாம்புகளில் நான் வாசுகி.

Commentary

புராணங்கள் வரலாற்றில் இணையற்ற பெரிய முனிவரான ததிசியின் தியாகத்தின் கதையை விவரிக்கின்றன.

சொர்க்கத்தின் அரசனான இந்திரன் ஒருமுறை விருத்ராசுரன் என்ற அரக்கனால் அவரது தேவலோக ராஜ்யத்திலிருந்து விரட்டப்பட்டார். அந்த அரக்கனுக்கு அதுவரை தெரிந்த எந்த ஆயுதத்தாலும் கொல்ல முடியாத வரம் இருந்தது. விரக்தியில், இந்திரன் உதவிக்காக சிவனை அணுகினார், அவர் அவரை விஷ்ணுவிடம் அழைத்துச் சென்றார். விருத்ராசுரனைக் கொல்லக்கூடிய ஒரே ஆயுதம் ததிசி முனிவரின் எலும்புகளால் செய்யப்பட்ட இடிமுழக்கம் மட்டுமே என்பதை விஷ்ணு இந்திரனுக்கு வெளிப்படுத்தினார். இந்திரன் ததிசியின் எலும்புகளை இடியை உருவாக்க பயன்படுத்துவதற்காக ததிசி தனது உயிரைக் கொடுக்கும் இறுதி தியாகத்தைச் செய்யுமாறு கெஞ்சினார். ததிசி கோரிக்கையை ஏற்றுக்கொண்டார், ஆனால் முதலில் அனைத்து புனித நதிகளுக்கும் புனித யாத்திரை செல்ல விரும்பினார். பின்னர் இந்திரன் அனைத்து புண்ணிய நதிகளின் நீரையும் நைமிஶரணையத்திற்கு வரவழைத்து, முனிவரின் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றினார். ததிசி யோக நுட்பங்களின் மூலம் தனது உடலை துறந்தார். அவரது எலும்புகளில் இருந்து உருவாக்கப்பட்ட இடி மின்னல் விருத்ராசுரனை தோற்கடிக்க பயன்படுத்தப்பட்டடு, இந்திரன் தேவலோக ராஜாவாக தனது நிலையை மீண்டும் பெற அனுமதித்தது. இந்த வசனத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் தனது மகிமையைக் குறிக்க வஜ்ராவின் பெயரை வேண்டுமென்றே குறிப்பிடுகிறார், மேலும் விஷ்ணுவின் கைகளில் எப்பொழுதும் வைத்திருக்கும் தண்டாயுதம் மற்றும் சக்கரத்தை விட அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்.

இந்த வசனத்தில், நல்ல குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஒரே நோக்கத்திற்காக உடலுறவு செய்யும் பொழுது அது புனிதமானது என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் வெளிப்படுத்துகிறார். காமதேவன், அன்பின் கடவுள் (மன்மதன்), இனப்பெருக்கம் மூலம் மனிதகுலத்தின் தொடர்ச்சியை எளிதாக்கும் எதிர் பாலினங்களுக்கு இடையேயான ஈர்ப்பு சக்திக்கு பொறுப்பானவர். இந்த பாலுறவு தூண்டுதல் கடவுளில் இருந்து அதன் தோற்றம் கொண்டது. மற்றும் உணர்ச்சிபூர்வமான இன்பத்திற்காக தவறாக பயன்படுத்தப்படக்கூடாது; மாறாக, அது தகுதியான சந்ததியைப் பெற்றெடுக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 7.11 வசனத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் தான் அறம் மற்றும் வேத கட்டளைகளுக்கு முரண்படாத பாலியல் ஆசை, என்று அறிவித்தார்.