Bhagavad Gita: Chapter 1, Verse 27

தா1ன்ஸமீக்ஷ்ய ஸ கௌ1ன்தே1ய: ஸர்வான்ப3ந்தூ4னவஸ்தி2தா1ன் ||
27 ||
க்1ருபயா ப1ரயாவிஷ்டோ1 விஷீத3ன்னித3மப்3ரவீத்1 |

தான்—--அவர்களை;  ஸமீக்ஷ்ய--—நோக்கிய பின்னர்; ஸஹ—--அவர்களை;  கௌன்தேயஹ--—குந்திபுத்திரனான-அர்ஜுனன்; ஸர்வான்—--எல்லோரையும்; பந்தூன்—--உறவினர்களையும்; அவஸ்திதான்—--இருப்பதை;  க்ருபயா--—இரக்கத்தினால்;  பரயா--—மிகவும்;  அவிஷ்டஹ—--உணர்ச்சிவசப்பட்டு;  விஷீதன்—--ஆழ்ந்த துயரத்துடன்;  இதம்--—இதை;  அப்ரவீத்—--கூறினார்

Translation

BG 1.27: அங்கு இருந்த அவரது உறவினர்கள் அனைவரையும் பார்த்து, குந்தியின் மகன் அர்ஜுனன் இரக்கத்தால் மூழ்கி, ஆழ்ந்த துக்கத்துடன், பின்வரும் வார்த்தைகளைப் பேசினார்.

Commentary

போர்க்களத்தில் தனது உறவினர்களை ஒன்றாகப் பார்த்த அர்ஜுனன், முதன்முறையாக, இந்த சகோதர கொலை யுத்தத்தின் விளைவுகளை உணர்ந்தார். எதிரிகளை மரணத்தின் வாயிலுக்கு அனுப்பவும், பாண்டவர்களுக்கு இழைத்த தவறுகளுக்குப் பழிவாங்கவும் மனதளவில் தயாராகி, போருக்கு வந்திருந்த வீரன், திடீரென்று மனம் மாறினார். தனது குரு வம்சத்தினர் பகைவர் அணியில் திரண்டிருப்பதைக் கண்டு, உள்ளமும் மனமும் குழம்பிய அர்ஜுனனின் கடமை நிறைவேற்றுவதற்கான துணிச்சல் கோழைத்தனத்திற்கு இடம் கொடுத்தது. அவர் தனது உறுதியான மனப்பான்மையை இழந்து மென்மையான இதயம் உடையவர் ஆனார். எனவே ஸஞ்ஜயன் அவரை குந்தியின் மகன் கௌந்தேய என்று குறிப்பிட்டார். இது அர்ஜுனன் தனது தாயைப் போலவே மென்மையான இதயம் கொண்டவர் என்பதை குறிப்பிடுகிறது.

Watch Swamiji Explain This Verse