Bhagavad Gita: Chapter 3, Verse 39

ஆவ்ருத1ம் ஞானமேதே1ன ஞானினோ நித்1யவைரிணா |

கா1மரூபே1ண கௌ1ன்தே1ய து3ஷ்பூ1ரேணானலேன ச1 ||39||

ஆவ்ரிதம்—---மூடப்பட்ட; ஞானம்—---அறிவு; ஏதேன---—இதனால்; ஜ்ஞாநினஹ-----ஞானிகளின்; நித்ய-வைரிணா—---நிரந்தர எதிரியால்; காம-ரூபேண—---ஆசைகளின் வடிவில்; கௌந்தேய---—குந்தியின் மகன் அர்ஜுனன்; துஷ்பூரேண—---திருப்தி அடையாத; அனலேன—---நெருப்பை போன்று; ச----மற்றும்

Translation

BG 3.39: ஓ குந்தியின் மகனே, மிகவும் விவேகமுள்ளவர்களின் அறிவு கூட இந்த நிரந்தர எதிரியால் திருப்தி அடையாத ஆசையின் வடிவத்தில் மூடப்பட்டு நெருப்பைப் போல எரிகிறது,

Commentary

இங்கே, காம் அல்லது காமத்தின் விரோதத் தன்மை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் இன்னும் தெளிவாக்கப்படுகிறது. காம் என்றால் ‘ஆசை’, துஷ்பூரேண என்றால் ‘திருப்தி அடையாத, அனலா என்றால் ‘வற்றாத’. ஆசை ஞானிகளின் பாரபட்ச சக்தியை முறியடித்து, அதை நிறைவேற்ற அவர்களை ஈர்க்கிறது. இருப்பினும், ஆசை என்ற நெருப்பை எவ்வளவு அதிகமாக அணைக்க முயற்சிக்கிறார்களோ, அவ்வளவு வலுவாக அது எரிகிறது. புத்தர் கூறுகிறார்:

ந க1ஹாபண வஸ்ஸேன, தி1த்1தி1 கா1மேஸு விஜ்ஜதி1

அப்11ஸ்ஸாதா3 கா1மா து3ஹ்கா2 கா1மா, இதி1 விஞ்ஞாய ப1ண்டிதோ1

( த4ம்மப13 வசனம் 186)

‘ஆசை அணையாத நெருப்பாக எரிகிறது, அது யாருக்கும் மகிழ்ச்சியைத் தராது. ஞானிகள் தைத் துறக்கிறார்கள், அது துன்பத்தின் வேர் என்று தெரிந்து கொள்கிறார்கள்.’ ஆனால் இந்த ரகசியத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் தங்கள் இச்சையைத் தணிக்க முயற்சிக்கும் வீண் முயற்சியில் தங்கள் வாழ்க்கையை வீணடிக்கிறார்கள்.

Watch Swamiji Explain This Verse