Bhagavad Gita: Chapter 5, Verse 17

1த்3பு3த்3த்4யஸ்த1தா3த்1மானஸ்த1ன்னிஷ்டா2ஸ்த1த்11ராயணா: |

3ச்12ன்த்1யபு1னராவ்ருத்1தி1ம் ஞானனிர்தூ411ல்மஷா: ||
17 |

தத-புத்தயஹ---கடவுளை நோக்கி புத்தி செலுத்துபவர்கள்; ததாத்-மானஹ----இதயம் (மனம் மற்றும் புத்தி) கடவுளில் மட்டுமே கடவுளில் ஈர்க்கப்பட்டவர்கள்; தத்-நிஷ்டாஹா—கடவுள் மீது உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள்; தத்-பராயணாஹா—--கடவுளை உயர்ந்த இலக்காகவும் அணைக்கவும் அடைய பாடுபடுபவர்கள்; கச்சந்தி--—செல்கின்றனர்; அபுனஹ-ஆவ்ருத்திம்—--திரும்பிவராமல்; ஞான—--அறிவால்; நிர்தூத--—அகற்றப்பட்டு; கல்மஷாஹா--—பாவங்கள்

Translation

BG 5.17: யாருடைய புத்தி கடவுளில் நிலைத்து ,முழுமையாக மூழ்கி கடவுளையே உயர்ந்த இலக்காக கருதி அசையாத நம்பிக்கையுடன் இருக்கிறதோ, அத்தகைய நபர்கள், அறிவின் ஒளியால் தங்கள் பாவங்கள் அகற்றப்பட்டு, திரும்ப முடியாத நிலையை விரைவாக அடைகிறார்கள்.

Commentary

அறியாமை ஒருவரை ஸ்ம்சாரத்தில் வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற நிரந்தர சுழற்சியில் துன்பத்திற்கு ஆளாக்குவது போல, அறிவு ஒருவரை ஜட அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும் சக்தி கொண்டது. அத்தகைய அறிவு எப்போதும்-கடவுளின் பக்தியுடன் இணைந்திருக்கும். இந்த வசனம் முழுமையான கடவுள்-உணர்வைக் குறிக்கும் வார்த்தைகளை மிகவும் அழுத்தமாகப் பயன்படுத்துகிறது.

1த்3பு3த்34யஹ  அதாவது புத்தி கடவுளை நோக்கி செலுத்தப்படுகிறது.

1தா3த்1மனஹ என்றால் இதயம் (மனம் மற்றும் புத்தி) கடவுளில் மட்டுமே ஈர்க்கப்படுகிறது.

1ன்னிஷ்டா2ஹா என்றால் புத்தி கடவுள் மீது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

1த்11ராயணஹ என்பது கடவுளை உயர்ந்த குறிக்கோளாகவும் அடைக்கலமாகவும் உணர்ந்து அதை அடைவதற்கு பாடுபடுதல் .

எனவே, உண்மையான அறிவின் அடையாளம், அது கடவுளின் மீது அன்பை ஏற்படுத்துவதாகும். அத்தகைய அன்பினால் நிரம்பிய பக்தர்கள் அவரை எங்கும் பார்க்கிறார்கள். அத்தகைய தெய்வீக தரிசனம் அடுத்த வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.