Bhagavad Gita: Chapter 13, Verse 28

ஸமம் ஸர்வேஷு பூ4தேஷு தி1ஷ்ட2ன்த1ம் ப1ரமேஶ்வரம் |

வினஶ்யத்1ஸ்வவினஶ்யன்த1ம் ய: ப1ஶ்யதி1 ஸ ப1ஶ்யதி1 ||28||

ஸமம்—--சமமாக; ஸர்வேஷு--—அனைத்து; பூதேஷு--—உயிரினங்களிலும்; திஷ்டன்-தம்—--துணை போகும்; பரம-ஈஶ்வரம்—--ஒப்புயர்வற்ற ஆன்மா; வினஶ்யத்ஸு—--அழிந்து போகக்கூடியவற்றில்; அவிநஶ்யந்தம்--— அழிவற்றது; யஹ--—யார்; பஶ்யதி--—பார்க்கிரார்களோ; ஸஹ—--அவர்கள்; பஶ்யதி--—உணர்கிறார்கள்

Translation

BG 13.28: எல்லா உயிர்களிலும் ஆன்மாவுடன் பரமாத்மாவை (உயர்ந்த ஆன்மாவை) உணர்ந்து, இந்த அழிந்துபோகும் உடலில் ஆத்மா மற்றும் பரமாத்மா இரண்டும் அழிவற்றது என்று புரிந்துகொள்பவர்கள் மட்டுமே உண்மையாகப் பார்க்கிறார்கள்

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் முன்பு 5.5 வசனத்தில் யஹ ப1ஶ்யதி1 ஸ ப1ஶ்யதி1 (அவர்கள் மட்டுமே உண்மையில் பார்க்கிறார்கள், யார் பார்க்கிறார்கள்...) என்ற சொல்லை பயன்படுத்தினார். உடலுக்குள் ஆன்மா இருப்பதைக் காண்பது போதாது என்று இப்பொழுது அவர் அதை மீண்டும் பயன்படுத்துகிறார். பரமாத்மாவாகிய கடவுள் எல்லா உடல்களிலும் அமர்ந்திருப்பதையும் நாம் பாராட்ட வேண்டும். அனைத்து உயிரினங்களின் இதயத்திலும் அவரது இருப்பு இந்த அத்தியாயத்தில் 13.23 வசனத்தில் கூறப்பட்டது. இது பகவத் கீதையின் 10.20 மற்றும் 18.61 வசனங்களிலும் மற்ற வேத நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது:

ஏகோ1 தே3வஹ ஸர்வபூ4தே1ஷு கூ34ஹ ஸர்வவ்யாபீ1 ஸர்வபூ4தா1ந்த1ராத்1மா

(ஶ்வேதா1ஶ்வத1ர உப1நிஷத3ம் 6.11)

‘கடவுள் ஒருவரே. அவர் எல்லா உயிர்களின் இதயங்களிலும் 6.11) வசிக்கிறார். அவர் எங்கும் நிறைந்தவர். அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் மேலான ஆன்மா.’

4வான் ஹி ஸர்வ-பூ4தா1நாம் ஆத்1ம ஸாக்ஷி ஸ்வ-த்3ரிக் விபோ4

(பா43வத1ம் 10.86.31

‘எல்லா உயிர்களுக்குள்ளும் கடவுள் சாட்சியாகவும் குருவாகவும் அமர்ந்திருக்கிறார்.

ராம ப்3ரஹ்ம சி1ன்மய அபி3னாஸீ, ஸர்ப3 ரஹித் ஸப3 உர பு1ர பா3ஸீ (ராமாயணம்)

'உன்னத பகவான் ராமர் நித்தியமானவர், எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர். அவர் அனைத்து உயிர்களின் இதயங்களிலும் வசிக்கிறார்.’

பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியில் உடலிலிருந்து உடலுக்குப் பயணிக்கும்பொழுது, ​​தனி ஆன்மாவுடன் பரம ஆன்மா துணை நிற்கிறது. ஒவ்வொருவரிடமும் கடவுள் இருப்பதை உணர்ந்து கொள்வது ஆத்மீக பயிற்சியாளரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் இப்பொழுது விளக்குகிறார்.