Bhagavad Gita: Chapter 4, Verse 1

ஶ்ரீப43வானுவாச1 |

இமம் விவஸ்வதே1 யோக3ம் ப்1ரோக்11வானஹமவ்யயம் |

விவஸ்வான்மனவே ப்1ராஹ மனுரிக்ஷ்வாக1வே‌ப்3ரவீத்1 || 1 ||

ஶ்ரீ-பகவான் உவாச—--ஒப்புயர்வற்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்; இமம்--—இது; விவஸ்வதே—--சூரிய கடவுளுக்கு; யோகம்— யோகத்தின் அறிவியல் ; ப்ரோக்தவான்—--கற்பிக்கப்பட்டது; அஹம்—--நான்; அவ்யயம்--—நித்தியமான; விவஸ்வான்—--சூரிய கடவுள்; மனவே—--மனிதகுலத்தின் மூலப் பிறவியான மனுவுக்கு; ப்ராஹ--—சொல்லப்பட்டது; மனுஹு--—மனு; இக்ஷ்வாகவே---சூரிய வம்சத்தின் முதல் அரசனான இக்ஷ்வாகுவிடம்; அப்ரவீத்---அறிவுறுத்தினார்

Translation

BG 4.1: ஒப்புயர்வற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார் : இந்த நித்திய யோக விஞ்ஞானத்தை நான் சூரியக் கடவுளான விவஸ்வானுக்குக் கற்றுக் கொடுத்தேன், அவர் அதை மனுவுக்குக் கொடுத்தார்; மற்றும் மனு, அதை இக்ஷ்வாகுவிடம் அறிவுறுத்தினார்.

Commentary

விலைமதிப்பற்ற அறிவை ஒருவருக்கு வழங்குவது மட்டும் போதாது. அந்த அறிவைப் பெறுபவர்கள் அதன் மதிப்பைப் பாராட்ட வேண்டும்; மற்றும், அதன் நம்பகத்தன்மையில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அதை நடைமுறையில் தங்கள் வாழ்வில் செயல்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அவர் அளிக்கும் ஆன்மீக ஞானத்தின் நம்பகத்தன்மையையும் முக்கியத்துவத்தையும் நிறுவுகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனிடம் தெரிவிக்கும் அறிவு, அவரை போருக்கு தூண்டும் காரணத்திற்காக புதிதாக உருவாக்கப்படவில்லை. யோகத்தின் அதே நித்திய அறிவியலை அவர் முதலில் விவஸ்வான் -- சூரியக் கடவுளுக்குக் கற்பித்தார். அவர் அதை மனிதகுலத்தின் அசல் முன்னோடியான மனுவுக்குக் கொடுத்தார்; மனு, சூரிய வம்சத்தின் முதல் மன்னன் இக்ஷ்வாகுவுக்குக் கற்பித்தார் .இந்த இறங்கு செயல்முறை அறிவின் சரியான அதிகாரம் கொண்ட ஒருவர் அதைக் கற்றுக்கொள்ள விரும்பும் மற்றொருவருக்கு வழங்குகிறார்.

இதற்கு நேர்மாறாக, அறிவைப் பெறுவதற்கான ஏறு செயல்முறையில் ஒருவர் சுய முயற்சியின் மூலம் புரிதலின் எல்லைகளை மேம்படுத்த முயற்சிக்கிறார். அதிகமான நேரம் மற்றும் மிகவும் கடுமையான உழைப்பும் தேவைப்படும் அறிவின் இந்த ஏறும் செயல்முறை முழுமையானது அல்ல. எடுத்துக்காட்டாக, நாம் இயற்பியலைக் கற்க விரும்பினால், அதை ஏறும் செயல்முறையின் மூலம் செய்ய முயற்சி செய்யலாம், அங்கு நாம் நமது சொந்த அறிவாற்றலைக் கொண்டு அதன் கொள்கைகளை ஊகித்து பின்னர் முடிவுகளை அடையலாம் அல்லது இந்தப் பாடத்தில் தேர்வு பெற்ற சிறந்த ஆசிரியரை அணுகி இறங்கு செயல்முறை மூலம் இயற்பியலை கற்கலாம். அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் அறிவின் ஏறும் செயல்முறை மூலம் நம் வாழ்நாளில் விசாரணை முடிக்க முடியாமல் போகலாம். மேலும் நாம் நமது முடிவுகளின் செல்லுபடியாகும் தன்மை குறித்தும் உறுதியாக இருக்க முடியாது. ஒப்பிடுகையில், இறங்கு செயல்முறையானது இயற்பியலின் ஆழமான இரகசியங்களை உடனடி அணுகுதலை வழங்குகிறது. நமது ஆசிரியருக்கு இயற்பியல் பற்றிய முழுமையான அறிவு இருந்தால், நேரடியாக அவரிடமிருந்து அறிவியலை கேட்டு அவர் சொல்வதை புரிந்து கொள்ள முடியும். அறிவைப் பெறுவதற்கான இந்த இறங்கு செயல்முறை எளிதானது மற்றும் குறைபாடற்றது.

கடவுள் மற்றும் தனிப்பட்ட ஆன்மா இரண்டும் நித்தியமானது, எனவே ஆன்மாவையும் கடவுளையும் இணைக்கும் யோக விஞ்ஞானமும் நித்தியமானது. அதைப் பற்றி யூகிக்கவும் புதிய கோட்பாடுகளை உருவாக்கவும் தேவையில்லை. இந்த உண்மையின் ஒரு அற்புதமான அங்கீகாரம் பகவத் கீதையே, அது பேசப்பட்டு ஐம்பது நூற்றாண்டுகளுக்குப் பிறகும் நம் அன்றாட வாழ்வில் தொடர்புடைய அதன் வற்றாத ஞானத்தின் சாதுர்யத்தால் மக்களைத் தொடர்ந்து பிரமிக்க வைக்கிறது. அர்ஜுனனுக்கு அவர் வெளிப்படுத்தும் யோக அறிவானது நித்தியமானது என்றும், அது குருவிடமிருந்து சீடனுக்கு - இறங்குதல் செயல்முறையின் மூலம் பண்டைய காலங்களில் வழங்கப்பட்டது என்றும் ஸ்ரீ கிருஷ்ணர் இங்கே கூறுகிறார்.

Watch Swamiji Explain This Verse