Bhagavad Gita: Chapter 4, Verse 16

கி1ம் க1ர்ம கி1மக1ர்மேதி11வயோ‌ப்1யத்1ர மோஹிதா1: |

1த்1தே11ர்ம ப்1ரவக்ஷ்யாமி யஞ்ஞாத்1வா மோக்ஷ்யஸே‌ஶுபா4த்1 ||16||

கிம்--—எது; கர்ம--—செயல்; கிம்--—எது; அகர்ம—--செயலற்ற தன்மை; இதி--—இவ்வாறு; கவயஹ--—ஞானமுள்ளவர்கள்; அபி—--கூட; அத்ர--—இதில்; மோஹிதாஹா—-குழப்பத்தில் உள்ளனர்; தத்—-அது; தே—-- உனக்கு; கர்ம—--செயல்; ப்ரவக்ஷ்யாமி—--நான் விளக்குகிறேன்; யத்--—அதை; ஞாத்வா--—அறிந்து; மோக்ஷ்யஸே-—நீ உன்னை விடுவித்துக் கொள்ளலாம்; அஶுபாத்----தீங்கிலிருந்து

Translation

BG 4.16: செயல் என்றால் என்ன, செயலற்ற தன்மை என்றால் என்ன? அறிவாளிகள் கூட இதை தீர்மானிப்பதில் குழப்பம் அடைகிறார்கள். இப்போது நான் உனக்கு செயலின் ரகசியத்தை விளக்குகிறேன், அதை அறிவதன் மூலம் நீ பொருள் அடிமைத்தனத்திலிருந்து விடுபடலாம்.

Commentary

தர்மத்தின் கொள்கைகளை மன ஊகங்களால் தீர்மானிக்க முடியாது. புத்திசாலிகள் கூட வேதங்கள் மற்றும் ஞானிகளால் முன்வைக்கப்படும் வெளிப்படையான முரண்பாடான வாதங்களால் குழப்பமடைகிறார்கள். உதாரணமாக, வேதங்கள் அஹிம்சையைப் பரிந்துரைக்கின்றன. அதன்படி, மஹாபாரதத்தில், அர்ஜுனன் அதே நடவடிக்கையைப் பின்பற்றி வன்முறையைத் தவிர்க்க விரும்புகிறார், ஆனால், ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு அர்ஜுனனின் கடமை வன்முறையில் ஈடுபடுவதாக அறிவுறுத்துகிறார். கடமை என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்றால், எந்த ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் ஒருவரின் கடமையை உறுதி செய்வது சிக்கலான விஷயம். மரணத்தின் தேவலோகக் கடவுள் யமராஜ் கூறினார்:

4ர்மம் து1 ஸாக்ஷாத்1 பகவத்1 ப்1ரணீத1ம்

ந வை விது3ர் ரிஷயோ நாபி 1 தே3வாஹா

(பா431தம் 6.3.19)

ஊகங்களால் தீர்மானிக்க முடியாது. அறிவார்ந்த மனிதர்கள் கூட எது சரி எது தவறு என்பதைப் பற்றிய முரண்பாடான விவாதங்களை கண்டு குழம்புகின்றனர். பெரிய ரிஷிகள் மற்றும் தேவலோக கடவுள்களுக்கு கூட இதை தீர்மானிப்பது கடினம். தர்மம் கடவுளால் உருவாக்கப்பட்டது, அவர் ஒருவரே அதன் உண்மையான அறிவாளி.' அர்ஜுனனிடம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்போது அவருக்கு செயல் மற்றும் செயலற்ற தன்மையின் இரகசிய அறிவியலை வெளிப்படுத்துவதாகக் கூறுகிறார்.

Watch Swamiji Explain This Verse