Bhagavad Gita: Chapter 18, Verse 65

மன்மனா ப4வ மத்34க்தோ1 மத்3யாஜீ மாம் நமஸ்கு1ரு |

மாமேவைஷ்யஸி ஸ1த்1யம் தே1 ப்1ரதி1ஜானே ப்1ரியோ1‌ஸி மே ||65||

மத்-மனாஹா--—எப்பொழுதும் என்னை நினைத்து ; பவ--—இருக்கும்; மத்---பக்தஹ: என் பக்தர்; மத்-யாஜீ--—என்னை வணங்கி; மாம்---—எனக்கு; நமஸ்குரு—வந்தனம்; மாம்—எனக்கு; ஏவ--—நிச்சயமாக; ஏஷ்யஸி— என்னிடம் வருவாய்; ஸத்யம்---—நிச்சயமாக; தே--—உனக்கு; ப்ரதிஜானே—--என்னுடைய உறுதிமொழி; ப்ரியஹ---- பிரியமானவன்; அஸி--—நீ; மே----எனக்கு.

Translation

BG 18.65: எப்பொழுதும் என்னை நினைந்து, என்னிடம் பக்தி செலுத்து, என்னை வணங்கி, எனக்கு வணக்கம் செலுத்து. அப்படிச் செய்தால், நீ நிச்சயமாக என்னிடம் வருவாய். இது உனக்கான என்னுடைய உறுதிமொழி, ஏனென்றால் நீ எனக்கு மிகவும் பிரியமானவன்.

Commentary

அத்தியாயம் 9 இல், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனிடம் மிகவும் இரகசியமான அறிவை வெளிப்படுத்துவதாக உறுதியளித்தார், பின்னர் பக்தியின் பெருமைகளை விவரித்தார். இங்கே, அவர் 9.34 வசனத்தின் முதல் வரியை மீண்டும் கூறுகிறார், அவருடைய பக்தியில் ஈடுபடும்படி கேட்டுக்கொள்கிறார். ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஆழ்ந்த அன்பை வளர்த்துக் கொண்டு, அவரது மனதை எப்போதும் அவரிடமுள்ள பிரத்யேக பக்தியில் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம், அர்ஜுன் உன்னதமான இலக்கை அடைவது உறுதி.

பக்தியில் முழுமையாக மூழ்கியவர் என்பதற்கு சிறந்த உதாரணம் அம்பரீஷ் மன்னர். ஸ்ரீமத் பாகவதம் விவரிக்கிறது:

ஸ வை மனஹ கி1ருஷ்ண-ப1தாரவிந்த1யோர்

வசாம்ஸி வைகு1ண்ட2-கு3ணாநுவர்ணநே

1ரௌ ஹரேர் மந்தி3ர-மார்ஜனாதி3ஷு

ஶ்ருதி1ம் ச1காராச்1யுத1-ஸத்1 கதோ23யே

முகு1ந்த-லிங்கா3லய-த3ர்ஶனே த்1ரிஶௌ

தத்3-பி4ருத்1ய-கா3த்1ர-ஸ்ப1ர்ஶே ’ங்க3-ஸங்க3மம்

க்3ராணம் ச31த்1-பாத3-ஸரோஜா- ஸௌரபே4

ஶ்ரீமத்1-து1லஸ்யா ரஸனாம் த1த்3 அர்பி1தே1

பா1தௌ3 ஹரே ஹே க்ஷேத்1ர-பதா3னுஸர்ப1ணே

ஶிரோ ஹ்ரீஷிகே1ஶ-பதா3பி4வந்த3னே

கா1ம ச1 தா3ஸ்யே ந து1 கா1ம-காம்1யாயா

யதோ2த்11மஶ்லோக1-ஜனாஶ்ரயா ரதி1ஹி (9.4.18–20)

‘அம்பரீஷ் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் தன் மனதை நிலைநிறுத்தினார்; கடவுளின் குணங்களைப் போற்றுவதில் தனது பேச்சையும், கோயிலைச் சுத்தம் செய்வதில் தனது கைகளையும், இறைவனின் தெய்வீக பொழுதுபோக்குகளைக் கேட்பதில் காதுகளையும் பயன்படுத்தினார். தன் கண்களை தெய்வங்களைக் காண்பதில் ஈடுபடுத்தினார்; பக்தியில் ஈடுபடுபவர்களுக்கு சேவை செய்வதில் அவர் தனது கைகால்களையும், இறைவனின் பாதத்தில் சமர்ப்பிக்கப்படும் துளசி (புனித துளசி) இலைகளின் வாசனையை முகர்வுணர்வதில், தனது மூக்கையும், மற்றும் அவரது நாக்கை கடவுளுக்கு பிரசாதமாக வழங்கிய புனித பட்ட உணவை சுவைப்பதிலும் பயன்படுத்தினார். புனித ஸ்தலங்களுக்குச் செல்ல அவர் தனது பாதங்களையும், கடவுளின் தாமரை பாதங்களுக்கு வணக்கம் செலுத்த தனது தலையையும் பயன்படுத்தினார். மாலை, சந்தனம் போன்ற அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணித்தார். அவர் இதையெல்லாம் ஏதோ சுயநல நோக்கத்துடன் செய்யவில்லை, ஆனால் தூய்மை படுத்துவதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் தன்னலமற்ற சேவையை அடைய மட்டுமே செய்தார்.’

முழு மனதுடன் அனைத்து புலன்களையும் கடவளில் பக்தியில் ஈடுபடுத்துவதற்கான அறிவுறுத்தல் அனைத்து வேதங்களின் சாரமாகவும் அனைத்து அறிவின் சுருக்கமாகவும் உள்ளது. இருப்பினும், ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிட்டது இது மிகவும் ரகசியமான அறிவு அல்ல, ஏனெனில் அவர் இதை முன்பே குறிப்பிட்டுள்ளார். இந்த உன்னத ரகசியத்தை இப்போது இந்த அடுத்த வசனத்தில் வெளிப்படுத்துகிறார்.