Bhagavad Gita: Chapter 18, Verse 70

அத்4யேஷ்யதே11 ய இமம் த4ர்ம்யம் ஸம்வாத3மாவயோ: |

ஞானயஞ்ஞேன தே1னாஹமிஷ்ட1: ஸ்யாமிதி1 மே மதி1: ||70||

அத்யேஷ்யதே—--படிப்பவர்கள்; ச—--மற்றும்; யஹ--—-யார்; இமம்--—இந்த புனிதமான உரையா;;தர்ம்யம்---- புனிதமான; ஸம்வாதம்—உரையாடல்; ஆவயோஹோ----—நம்முடையது;ஞான----அறிவின்; யஞ்ஞேன-தேன---அறிவின் தியாகத்தின் மூலம்; அஹம்—--நான்; இஷ்டஹ--— வணங்குவார்கள்; ஸ்யாம்---—இருக்கும்; இதி---—அத்தகைய; மே---என்; மதிஹி--—கருத்து.

Translation

BG 18.70: நம்முடைய இந்த புனிதமான உரையாடலைப் படிப்பவர்கள் அறிவின் தியாகத்தின் மூலம் என்னை (தங்கள் புத்தியால்) வணங்குவார்கள் என்று நான் அறிவிக்கிறேன்; இதுவே என் கருத்து.

Commentary

ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் தனது புத்தியை அவரிடம் ஒப்படைக்குமாறு பலமுறை கூறினார் (வசனம் 8.7, 12.8). இது நாம் அறிவாற்றலைப் பயன்படுத்துவதை நிறுத்துவதைக் குறிக்கவில்லை; மாறாக, நமது அறிவாற்றலை நம்மால் முடிந்தவரை நமக்கான அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதில் பயன்படுத்துபடுத்துவதைக் குறிக்கிறது. பகவத் கீதையின் செய்தியிலிருந்து, அவருடைய விருப்பம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். எனவே, இந்த புனித வசனத்தைப் படிப்பவர்கள் தங்கள் அறிவாற்றலால் கடவுளை வணங்குகிறார்கள்.